தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

தன் குற்றம்

கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்;
 காடுஎறியு மறவனைநாடு ஆள்வாய் என்றேன்.
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்;
 போர்முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயம் என்றேன் சூம்பல்தோளை;
 வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை'என்றான்;
 யானும் எந்தன் குற்றத்தால் ஏகின்றேனே!

இராமச்சந்திர கவிராயர்


தனிப்பாடல் திரட்டு > சித்திர கவி > பாடல்: 26

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025