தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

படிக்காசுப் புலவரைப் புகழ்ந்து பாடியது

மட்டாரும் தென்களந்தைப் படிக்காசன்
 உரைத்தமிழ் வரைந்த ஏட்டைப்
பட்டாலே சூழ்ந்தாலும், மூவுலகும் பரிமளிக்கும்;
 பரிந்துஅவ் ஏட்டைத்
தொட்டாலும் கைம்மணக்கும்; சொன்னாலும்
 வாய்மணக்கும்; துய்யசேற்றில்
நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே!
 பாட்டிலுறு நளினம்தானே!

பலபட்டை சொக்கநாதப் புலவர்


தனிப்பாடல் திரட்டு > புகழ்ச்சி > பாடல்: 33

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Feb 06, 2025