மூதுரை | Moothurai | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு மூதுரை > கடவுள் வாழ்த்து > பாடல்: 0 | |
1 | நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கோல் என வேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால் மூதுரை > நூல் > பாடல்: 1 | |
2 | நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர் மூதுரை > நூல் > பாடல்: 2 | |
3 | இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியவும்-இன்னாத நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு மூதுரை > நூல் > பாடல்: 3 | |
4 | அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும் மூதுரை > நூல் > பாடல்: 4 | |
5 | அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா மூதுரை > நூல் > பாடல்: 5 | |
6 | உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண் பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான் மூதுரை > நூல் > பாடல்: 6 | |
7 | நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகுமாம் குணம் மூதுரை > நூல் > பாடல்: 7 | |
8 | நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று மூதுரை > நூல் > பாடல்: 8 | |
9 | தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது மூதுரை > நூல் > பாடல்: 9 | |
10 | நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை மூதுரை > நூல் > பாடல்: 10 | |
11 | பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர் ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல் மூதுரை > நூல் > பாடல்: 11 | |
12 | மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம் உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும் மூதுரை > நூல் > பாடல்: 12 | |
13 | கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம் மூதுரை > நூல் > பாடல்: 13 | |
14 | கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன் பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி மூதுரை > நூல் > பாடல்: 14 | |
15 | வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மேல் இட்ட கலம் மூதுரை > நூல் > பாடல்: 15 | |
16 | அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு மூதுரை > நூல் > பாடல்: 16 | |
17 | அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு மூதுரை > நூல் > பாடல்: 17 | |
18 | சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று) அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக் கால் மூதுரை > நூல் > பாடல்: 18 | |
19 | ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி - தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம் விதியின் பயனே பயன் மூதுரை > நூல் > பாடல்: 19 | |
20 | உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு மூதுரை > நூல் > பாடல்: 20 | |
21 | இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும் மூதுரை > நூல் > பாடல்: 21 | |
22 | எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை மூதுரை > நூல் > பாடல்: 22 | |
23 | கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீர்ஒழுகு சான்றோர் சினம் மூதுரை > நூல் > பாடல்: 23 | |
24 | நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல் கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம் மூதுரை > நூல் > பாடல்: 24 | |
25 | நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர் மூதுரை > நூல் > பாடல்: 25 | |
26 | மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு மூதுரை > நூல் > பாடல்: 26 | |
27 | கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம் அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண் மூதுரை > நூல் > பாடல்: 27 | |
28 | சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம் தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால் மனம்சிறியர் ஆவரோ மற்று மூதுரை > நூல் > பாடல்: 28 | |
29 | மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து போம்போ(து) அவளோடு (ம்) போம் மூதுரை > நூல் > பாடல்: 29 | |
30 | சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம் மூதுரை > நூல் > பாடல்: 30 |