முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | ||
1 | கடவுள் வாழ்த்து. மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு ! முத்தொள்ளாயிரம் > இறை > கடவுள் வாழ்த்து. > பாடல்: 1 | |
2 | அடைப்பும் திறப்பும் தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலா வண்டுலா அங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு ! முத்தொள்ளாயிரம் > சேரன் > அடைப்பும் திறப்பும் > பாடல்: 2 | |
3 | இழந்தலும் பெற்றதும் வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர் மாமையே யன்றோ இழப்பது- மாமையிற் பன்னுாறு கோடி பழுதோ! என் மேனியிற் பொன்னுாறி யன்ன பசப்பு! முத்தொள்ளாயிரம் > சேரன் > இழந்தலும் பெற்றதும் > பாடல்: 3 | |
4 | முடிந்ததும் முடியாததும் கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை-அடைக்குமேல் ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான்! முத்தொள்ளாயிரம் > சேரன் > முடிந்ததும் முடியாததும் > பாடல்: 4 | |
5 | பழிக்காப்பு வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! - நிரை வளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் செங்கோலன் அல்லன் என! முத்தொள்ளாயிரம் > சேரன் > பழிக்காப்பு > பாடல்: 5 | |
6 | கனவுப் புணர்ச்சி புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரு நல்நாடன்-என் னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு! முத்தொள்ளாயிரம் > சேரன் > கனவுப் புணர்ச்சி > பாடல்: 6 | |
7 | நெஞ்சு விடு துாது கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை யாக நெடுங்கடை நின்றதுகொல் தோழி!-நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை காணிய சென்றவென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > சேரன் > நெஞ்சு விடு துாது > பாடல்: 7 | |
8 | வருவதும் போவதும் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > சேரன் > வருவதும் போவதும் > பாடல்: 8 | |
9 | காணாப் பேச்சு வருக குடநாடன் வஞ்சிக்கோ மானென் றருகலர் எல்லாம் அறிய-ஒருகலாம் உண்டா யிருக்கஅங் ஓண்தொடியாள் மற்றவனைக் கண்டாள் ஒழிந்தாள் கலாம்! முத்தொள்ளாயிரம் > சேரன் > காணாப் பேச்சு > பாடல்: 9 | |
10 | வஞ்சப் புகழ்ச்சி இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன் எனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று-அஞ்சொலாய்! சொல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோபெரிது! முத்தொள்ளாயிரம் > சேரன் > வஞ்சப் புகழ்ச்சி > பாடல்: 10 | |
11 | காதல் நோய் காராட் டுதிரம்துாய்உய் அன்னை களன்இழைத்து நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! -போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதேக்கென் நெஞ்சங் களங்கொண்டநோய்! முத்தொள்ளாயிரம் > சேரன் > காதல் நோய் > பாடல்: 11 | |
12 | உலக இயல்பு மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும் சொல்லவே வேண்டும் நமகுறை-நல்ல திலகங் கிடந்த திருநுதலாய் அஃதால் உலகங் கிடந்த இயல்பு! முத்தொள்ளாயிரம் > சேரன் > உலக இயல்பு > பாடல்: 12 | |
13 | அணையா நெருப்பு நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய ஊரிரே என்னை உயக்கொண்மின்-போரிந் புகலுங் களியானைப் புழியர் கோக் கோதைக் கழலுமென் நெஞ்சங் கிடந்து! முத்தொள்ளாயிரம் > சேரன் > அணையா நெருப்பு > பாடல்: 13 | |
14 | சேர நாடு அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய் அவிழ வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப்-புள்ளினம்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு முத்தொள்ளாயிரம் > சேரன் > சேர நாடு > பாடல்: 14 | |
15 | வஞ்சி வளம் களிகன் களிகட்கு நீட்டத்தங் கையாற் களிகள் விதிர்த்திட்ட வெங்கட்-துளிகலந்து ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே பும்புனல் வஞ்சி அகம்! முத்தொள்ளாயிரம் > சேரன் > வஞ்சி வளம் > பாடல்: 15 | |
16 | வானகமும் வையகமும் வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர்-வானத்து மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான்! முத்தொள்ளாயிரம் > சேரன் > வானகமும் வையகமும் > பாடல்: 16 | |
17 | உய்யும் வழி பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின் மல்லல் நெடுமதில் வாங்குவிற் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வர் விசும்பு! முத்தொள்ளாயிரம் > சேரன் > உய்யும் வழி > பாடல்: 17 | |
18 | நரியினமும் வண்டினமும் அரும்பவிழ் தார்க் கோதை அரசெறிந்த வெள்வேல் பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச்-சுரும்பொடு வண்டாடு பக்கமு முண்டு குறுநரி கொண்டாடு பக்கமும் உண்டு! முத்தொள்ளாயிரம் > சேரன் > நரியினமும் வண்டினமும் > பாடல்: 18 | |
19 | குடையோ? திங்களோ? வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப் பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை! முத்தொள்ளாயிரம் > சேரன் > குடையோ? திங்களோ? > பாடல்: 19 | |
20 | யானை நாவாய் அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டாற்-பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே யெங்கோமான் காய்சினதேற் கோதை களிறு! முத்தொள்ளாயிரம் > சேரன் > யானை நாவாய் > பாடல்: 20 | |
21 | பூழியன் போர்க்களம் மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடக்கை வாங்கித்-துயருழந்து புண்ணுற் றழைக்கும் குறுநரித்தை பூழியனை கண்ணுற்று வீழந்தார் களம்! முத்தொள்ளாயிரம் > சேரன் > பூழியன் போர்க்களம் > பாடல்: 21 | |
22 | சேரன் சினந்தால்! கரிபர்ந்து எங்கும் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையும் கூடி-எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு! முத்தொள்ளாயிரம் > சேரன் > சேரன் சினந்தால்! > பாடல்: 22 | |
23 | வேலைப் பழித்தால் வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து ஊரறியலாகா கிடந்தனவே-போரின் முகையவிழ்த்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு! முத்தொள்ளாயிரம் > சேரன் > வேலைப் பழித்தால் > பாடல்: 23 | |
24 | பெரும் பழி திறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதாம் ஏதம்-உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக் கண்ணீரக் காணக் கதவு! முத்தொள்ளாயிரம் > சோழன் > பெரும் பழி > பாடல்: 24 | |
25 | கானல் நீர் குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை வதுவை யெருகென்றால் அன்னை- அதுபோய் விளைந்தவா இன்று! வியன் கானல் வெண்தேர்த் துலங்குநீர் மாமருட்டி அற்று! முத்தொள்ளாயிரம் > சோழன் > கானல் நீர் > பாடல்: 25 | |
26 | கண்ணும் கயலும் சுடரிலைவேற் சோழன் தன் பாடலம் ஏறிப் படர்தந்தான் பைந்தொடியார் காணத்- தொடர்புடைய நீர் வலையிற் கயல்போற் பிறழுமே சாலேக வாயில்தொறுங் கண்! முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணும் கயலும் > பாடல்: 26 | |
27 | தேரையும் பாவையும் அன்னையும் கோல்கொண் டலைக்கும் அயலாரும் என்னை அழியுஞ்சொற் சொல்லுவர்-நுண்ணிலைய தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்தேர் வளவன் திறத்து! முத்தொள்ளாயிரம் > சோழன் > தேரையும் பாவையும் > பாடல்: 27 | |
28 | நீரும் நெருப்பும் அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி விலங்கியான் வேண்டா வெனினும்- நலந்தொலைந்து பீர்மேற் கொளல் உற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல் நீர்மே லெழுந்த நெருப்பு! முத்தொள்ளாயிரம் > சோழன் > நீரும் நெருப்பும் > பாடல்: 28 | |
29 | நாணும் நலனும் நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக் காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற- யாமத் திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத் திரிதரும் பேருமென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > சோழன் > நாணும் நலனும் > பாடல்: 29 | |
30 | கனவிலும் இழந்தேன் ஊடல் எனஒன்று தோன்றி அல்ருறூஉங் கூடல் இழந்தேன் கொடியன்னாய்!-நீடெங்கின் பாளையிற் தேன் தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளையைக் கண்படையுட் பெற்று முத்தொள்ளாயிரம் > சோழன் > கனவிலும் இழந்தேன் > பாடல்: 30 | |
31 | கண்ணாரக் காணேன் புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன் கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர் மண்ணளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ கண்ணாரக் கண்டறியா வாறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணாரக் காணேன் > பாடல்: 31 | |
32 | கண்ணும் நாணமும் கனவினுள் காண்கொடா கண்ணூம் கலந்த நனவினுள் முன்விலக்கு நாணும்-இனவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று! முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணும் நாணமும் > பாடல்: 32 | |
33 | முறை இதுவோ? கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள்-கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற் கெலாஅ முறைகிடந்த வாறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > முறை இதுவோ? > பாடல்: 33 | |
34 | அரசர்க்குரியது என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம் மன்னன் புன்னாடன் வௌவினான் -என்னே அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள்! முத்தொள்ளாயிரம் > சோழன் > அரசர்க்குரியது > பாடல்: 34 | |
35 | காவானோ தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன் மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ! மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல்! முத்தொள்ளாயிரம் > சோழன் > காவானோ > பாடல்: 35 | |
36 | அறமும் அரசும் அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி -இறையிறந்த அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன் சென்கோன்மை செந்நின்ற வாறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > அறமும் அரசும் > பாடல்: 36 | |
37 | பெண்தன்மை நீள்நீலத் தாரிவளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை யின்றி நடத்தியால் - நீள்நிலம் கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி! முத்தொள்ளாயிரம் > சோழன் > பெண்தன்மை > பாடல்: 37 | |
38 | நாரைவிடு தூது செங்கால் மடநாராய்! தென்னுறந்தை சேநியேல் நின்கால்மேல் ைவைப்பன் என் கையிரண்டும் - நன்பால் கரை உறிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய்! முத்தொள்ளாயிரம் > சோழன் > நாரைவிடு தூது > பாடல்: 38 | |
39 | கண்ணோட்டம் வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே மரக்கண்ணோ மண் ஆள்வார் கண்ணென் - றிரக்கண்டாய் வாள் உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென் தோள் அழுவம் தோன்றத் தொழுது! முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணோட்டம் > பாடல்: 39 | |
40 | வாடைக் காற்றே பேயோ பெருந்தண் பனிவாடாய்! பெண்பிறந்தா ரேயோ உனக்கிங்க் கிறைக்குடிகள் -நீயோ களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி அளியிடை அற்றம் பார்ப் பாய்! முத்தொள்ளாயிரம் > சோழன் > வாடைக் காற்றே > பாடல்: 40 | |
41 | வண்டின் தூது நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீல்முந் தைவந்-தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்! பண்டன்று பட்டினங் காப்பு முத்தொள்ளாயிரம் > சோழன் > வண்டின் தூது > பாடல்: 41 | |
42 | தானையும் யானையும் தானைகொண் டோடுவ தாய்ந்தன் செங்கோன்மை சேனை யறியக் கிளவேனோ-யானை பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி நெடுவீதி நேர்பட்ட போது முத்தொள்ளாயிரம் > சோழன் > தானையும் யானையும் > பாடல்: 42 | |
43 | சோழ நாடு காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை-காவலன்தன் கொல்யானை மேலிருந்து கூற்றி சைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு! முத்தொள்ளாயிரம் > சோழன் > சோழ நாடு > பாடல்: 43 | |
44 | உறைந்த வளம் மாலை விலைபகர்வார் கிள்லிக் களைந்தபூச் சால மருவியதோர் தன்மைத்தால்-காலையே வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன் பொற்பார் உறந்தை அகம்! முத்தொள்ளாயிரம் > சோழன் > உறைந்த வளம் > பாடல்: 44 | |
45 | குடைச் சிறப்பு மந்தரங்க் காம்பா மணீவிசும் போலையாத் திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிலற்றுமே கொற்றப் போர்க் கிள்ளி குடை! முத்தொள்ளாயிரம் > சோழன் > குடைச் சிறப்பு > பாடல்: 45 | |
46 | இரே வதித் திருநாள் அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார்-எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னொ சிலம்பிதன கூடிழந்த வாறு முத்தொள்ளாயிரம் > சோழன் > இரே வதித் திருநாள் > பாடல்: 46 | |
47 | மன்னர் மன்னன் நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து முந்தந்த மன்னர் முடிதாக்க-இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே பெருந்தண் உறந்தையார் கோ! முத்தொள்ளாயிரம் > சோழன் > மன்னர் மன்னன் > பாடல்: 47 | |
48 | ஆற்றலும் அழகும் கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் முடியிடறித் தேய்ந்த நகமும்-பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > ஆற்றலும் அழகும் > பாடல்: 48 | |
49 | உஞ்சைமுதல் ஈழம்வரை கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப்-பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > உஞ்சைமுதல் ஈழம்வரை > பாடல்: 49 | |
50 | களிறு புறப்பட்டால் பற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப-ஆற்ற அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > களிறு புறப்பட்டால் > பாடல்: 50 | |
51 | செம்பியன் போர்க்களம் முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மட்டி-எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம்! முத்தொள்ளாயிரம் > சோழன் > செம்பியன் போர்க்களம் > பாடல்: 51 | |
52 | கூகையிள் தாலாட்டு இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற வரி இளம் செங்காற் குழவி-அரையிரவில் ஊமந்தா ராட்ட உறங்கிற்றே! செம்பியன் தன் நாமம்பா ராட்டாதார் நாடு! முத்தொள்ளாயிரம் > சோழன் > கூகையிள் தாலாட்டு > பாடல்: 52 | |
53 | துளைதொட்ட தேன் காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க் கென்னைகொல் கைம்மா றினி! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > துளைதொட்ட தேன் > பாடல்: 53 | |
54 | தாயும் மகளும் வளையவாய் நீண்டதோள் வாட்கணாய்! அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோர்!- தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல்என் பாள்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தாயும் மகளும் > பாடல்: 54 | |
55 | ஆற்றாமையும் அறியாமையும் கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென வேட்டங்க்குச் சென்றெவன் நெஞ்சறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > ஆற்றாமையும் அறியாமையும் > பாடல்: 55 | |
56 | நானும் இழப்பதா களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப் பணியாரே தம்பார் இழக்க-அணியாகங் கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின் கொய்தளிர் அன்ன நிறம்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நானும் இழப்பதா > பாடல்: 56 | |
57 | காப்பதா? கவர்வதா? வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் -இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூசல் இனி! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > காப்பதா? கவர்வதா? > பாடல்: 57 | |
58 | யானோ எளியேன்? தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வானேற்ற வையகம் எல்லாமால்-யானோ எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன் அளியானேல் அன்றென்பார் ஆர்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யானோ எளியேன்? > பாடல்: 58 | |
59 | பாலும் நீரும் மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள் என்னுயிரும் எண்ணப் படுமாயின் - என்னுயிர்க்கே சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாலும் நீரும் > பாடல்: 59 | |
60 | மானும் மங்கையும் புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா நகுவாரை நாணி மறையா- இகுகரையின் ஏமான் பிணைபோல நின்றதே கூடலார் கோமான்பின் சென்றவென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மானும் மங்கையும் > பாடல்: 60 | |
61 | கனவோ? நினைவோ? களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை அளியான் அளிப்பானே போன்றான் தௌியாதே செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்பேன் என் அலால் யான்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கனவோ? நினைவோ? > பாடல்: 61 | |
62 | கண்கள் கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம் நனவில் எதிர்விழிக்க நாணும்-புனையிழாய்! என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன் தண்கண் அருள்பெறுமா தான்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கண்கள் > பாடல்: 62 | |
63 | வளைக்கள் வன் தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி களையினும் என் கைதிறந்து காட்டேன் - வளைகொடுப்போம் வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் தென்கண் புகுந்தான் இரா! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வளைக்கள் வன் > பாடல்: 63 | |
64 | கனவும் இழந்தேன் ஓராற்றல் எண்கண் இமைபொருந்த அந்நிலையே கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற- வாரா நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன் கனவும் இழ்ந்திருந்த வாறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கனவும் இழந்தேன் > பாடல்: 64 | |
65 | குவளையின் தவம் கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > குவளையின் தவம் > பாடல்: 65 | |
66 | யார் அறிவார்? அறிவாரார் யாமொருநாட் பெண்டிரே மாகச் செறிவார் தலைமே னடந்து-மறிதிரை மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொருநாட் பெற! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யார் அறிவார்? > பாடல்: 66 | |
67 | தோளும் துணைவனும் கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும் மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால் என்பெறா வாடும் என் தோள்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தோளும் துணைவனும் > பாடல்: 67 | |
68 | முத்துத் துளிகள் இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது-கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > முத்துத் துளிகள் > பாடல்: 68 | |
69 | வள்ளைப் பாட்டு கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித்-தொடியுலக்கை கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ? யானும் ஓர் அம்மனைக் காவல் உளேன்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வள்ளைப் பாட்டு > பாடல்: 69 | |
70 | தோழிவிடு தூது என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந் தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென் கண்படாவாறே யுரை! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தோழிவிடு தூது > பாடல்: 70 | |
71 | வாடைவிடு தூது மாறாடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் நீயோ குளீர்வாடாய்! சோறடுவார் ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென் வாரத்தால் தோற்றேன் வளை! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வாடைவிடு தூது > பாடல்: 71 | |
72 | பெண்ணும் பிடியும் துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை யிரப்பல் - கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகதலுமெஞ் சாலேகம் சார நட! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பெண்ணும் பிடியும் > பாடல்: 72 | |
73 | பிடியும் பெண்மையும் எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான் புலாஅல் நெடுநல்வேல் மாறன் - உலா அங்கால் பைய நடக்கவுந் தோற்றாயால் நின்பெண்மை ஐயப் படுவ துடைத்து! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பிடியும் பெண்மையும் > பாடல்: 73 | |
74 | மாதும் மாவும் போரகத்துப் பாயுமா பாயாது பாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ - கூர்வேல் மதிவெங் களியானை மாறன் தன் மார்பங் கதவங்கொண் டியாமுந் தொழ! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மாதும் மாவும் > பாடல்: 74 | |
75 | வழுதியும் பூவையும் ஆடுகோ! சூடுகோ! ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ -நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வழுதியும் பூவையும் > பாடல்: 75 | |
76 | வாடையும் வாட்டமும் பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல அணியிழை அஞ்ச வருமால் - மணியானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறியோர் வாடை சினந்து முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வாடையும் வாட்டமும் > பாடல்: 76 | |
77 | மங்கையும் கொங்கையும் வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல் ஏரிய ஆயினும் என்செய்யும் - கூரிய கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மங்கையும் கொங்கையும் > பாடல்: 77 | |
78 | நாணமும் நலிவும் நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று காணாக்காற் கைவளையுஞ் சோருமால் - காணேன் நான் வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நாணமும் நலிவும் > பாடல்: 78 | |
79 | நாணமும் நங்கையும் மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் - கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நாணமும் நங்கையும் > பாடல்: 79 | |
80 | வரிவளையும் புரிவளையும் செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய்! - கையார் வரிவளை நின்றன வையயார் கோமான் புரிவளை போந்தியம்பக் கேட்டு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வரிவளையும் புரிவளையும் > பாடல்: 80 | |
81 | உரையும் திரையும் உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் - புகுவான் திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான் உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > உரையும் திரையும் > பாடல்: 81 | |
82 | சுழிக்குறி கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடு என்று - கூடல் இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும் பிழைப்பில் பிழைபாக் கறிந்து! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > சுழிக்குறி > பாடல்: 82 | |
83 | விளக்கமும் காமமும் குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி - புறப்படின் ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல் நாடறி கௌவை தரும்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > விளக்கமும் காமமும் > பாடல்: 83 | |
84 | வையையும் தையலும் ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் - வேற்கண்ணாய்! கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர் எல்லாம் எனக்கோர் இடர்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வையையும் தையலும் > பாடல்: 84 | |
85 | ஊடல் யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதற்பின் தான் ஊட யானுணர்த்தத் தான் உணரான் - தேன் ஊறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > ஊடல் > பாடல்: 85 | |
86 | இரவு புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார் நில்லா யிரவே நெடிதென்பர் - நல்ல விராமலர்த் தார்மாறன் வென்சாந் தகலம் இராவளிப் பட்ட திது! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > இரவு > பாடல்: 86 | |
87 | பாண்டிய நாடு பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் - சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேல் தலைபடுப தார்வேந்தர் மார்பு முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாண்டிய நாடு > பாடல்: 87 | |
88 | முத்து வளம் நந்தின இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித் திகழ்முத்தம் போற்றோன்றும் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையான் நாடு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > முத்து வளம் > பாடல்: 88 | |
89 | கூடல் அகம் மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும ஈஞ்சாந்தின சேறுழக்கி - எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூடல் அகம்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கூடல் அகம் > பாடல்: 89 | |
90 | முருகனும் மாறனும் மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும் கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் - தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன் தமிழால் யாம்பாடும் பாட்டு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > முருகனும் மாறனும் > பாடல்: 90 | |
91 | முடியும் அடியும் செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்ரியபூப் பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் - எங்கும் முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும்1 முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > முடியும் அடியும் > பாடல்: 91 | |
92 | மாலும் மன்னனும் கூந்தன்மா கொன்று குடிமாடிக் கோவலானாய்ப் பூந்ந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் - யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மாலும் மன்னனும் > பாடல்: 92 | |
93 | உத்திராடத் திருநாள் கண்ணர் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணாற நடைப் புரவி பண்விடுமின் - நண்ணார்தம் தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள் போர்வேந்தன் பூசல் இலன்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > உத்திராடத் திருநாள் > பாடல்: 93 | |
94 | குடை கண்டால் நிறைமதிபோல் யானைமேல் நீல்த்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர் - திறைகொள் இறையோ! எனவந் திடம்பெறுதல் இன்றி முறையோ என நின்றார் மொய்த்து! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > குடை கண்டால் > பாடல்: 94 | |
95 | மன்னர் முடியும் மாவின் அடியும் நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யறநிமிர்ந்து பொங்கா - அரசர்தம் முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத் தமாப் பொன்னுரையகல் போன்ற குளம்பு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மன்னர் முடியும் மாவின் அடியும் > பாடல்: 95 | |
96 | வேலும் பாம்பும் அருமணி அந்தலை யாடரவம் வானத்து உருமேற்ரை அஞ்சி ஒளிக்கும் - செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே அங்கண்மா ஞாலத் தரசு முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வேலும் பாம்பும் > பாடல்: 96 | |
97 | தேவரும் காவலனும் நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி பூமி மிதியாப் பொருள்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தேவரும் காவலனும் > பாடல்: 97 | |
98 | பாம்பும் பகைவரும் செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமின் இடிமுரசு ஆர்ப்ப - அறவுறழ்ந்து ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாம்பும் பகைவரும் > பாடல்: 98 | |
99 | யானையின் பட்டயம் மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க வையக மெல்லாம் எம்தென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யானையின் பட்டயம் > பாடல்: 99 | |
100 | கொம்பின் தொழில் உருவத்தார்த் தென்னவன் ஓங்குஎழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் வேறால் - ஒருகோடு வேற்றார் அகலம் உழுமே யொருகோடு மாற்றார் மதில்திறக்கு மால்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கொம்பின் தொழில் > பாடல்: 100 | |
101 | மாறன் களிறு தோற்ற மலைகடல் ஓசை புயல்கடாஅங் காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் - கூற்றுங் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே யெங்கோள் எறிகதிர்வேல் மாறன் களிறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மாறன் களிறு > பாடல்: 101 | |
102 | நாணமும் வீரமும் அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப் பிடிமுன் பழகதலில் நாணி - முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல் தென்னவர் கோமான் களிறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நாணமும் வீரமும் > பாடல்: 102 | |
103 | தென்னவன் போர்க்களம் வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி -நரிவெரீஇச் சேட்கணித்தாய் நின்றழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தென்னவன் போர்க்களம் > பாடல்: 103 | |
104 | வீரமும் ஈரமும் ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன் தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி - யானையும் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே பல்யானை அட்ட களத்து! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வீரமும் ஈரமும் > பாடல்: 104 | |
105 | கூகையின் கொலு வாகை வனமாலை சூடு அரசுறையும் ஓகை உயர்மாடத் துள்ளிருந்து - கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கூகையின் கொலு > பாடல்: 105 | |
106 | பாண்டியர் சினந்தால் பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையின் உய்யாதார் தேயம் - முறைமுறையின் ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே ஈன்பேய் உறையும் இடம்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாண்டியர் சினந்தால் > பாடல்: 106 | |
107 | பாண்டியன் பண்பு கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான் மடித்தவாய் சுட்டிய கையாற் - பிடித்தவேற் களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக் கண்டு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாண்டியன் பண்பு > பாடல்: 107 | |
108 | அருமருந்து தொழில்தோற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின் நழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் - கழலடைந்து மண்ணிரத்த லென்ப வயங்குதார் மாமறன் கண்னிரத்தந் தீர்க்கு மருந்து! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > அருமருந்து > பாடல்: 108 | |
109 | சிதைந்த பாடல் இருங்களி ன்ற மடப்பிடி சார லிருங்கருவி நீராற் றௌி நலங்கிளர்வேற் றுன்னரும் போர்க்கோதை துடாசெருக்கின் மன்னன் மதிலாய வென்று! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > சிதைந்த பாடல் > பாடல்: 109 |