யாப்பருங்கலக்காரிகை | YaapparungalaKaarigai | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | ||
1 | தற்சிறப்புப் பாயிரம் கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ் எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்தசைசீர் பந்தம் அடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின் சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே (1) யாப்பருங்கலக்காரிகை > தற்சிறப்புப் பாயிரம் > பாடல்: 1 | |
2 | தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக் கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல் யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால் ஆனா அறிவின் அவர்கட்கென் னாங்கொலென் ஆதரவே (2) யாப்பருங்கலக்காரிகை > அவையடக்கம் > பாடல்: 2 | |
3 | சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான்மொழிந்த பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப் பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய் இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே (3) யாப்பருங்கலக்காரிகை > அவையடக்கம் > பாடல்: 3 | |
4 | குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும் சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய் அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே (4) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > எழுத்து > பாடல்: 4 | |
5 | குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே நெறியே வரினும் நிறைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று அறிவேய் புரையுமென் தோளி உதாரணம் ஆழிவெள்வேல் வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே (5) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > அசை > பாடல்: 5 | |
6 | ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம் நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யாலிறுப வாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர் ஓரசை யேநின்றுஞ் சீராம் பொதுவொரு நாலசையே (6) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > சீர் > பாடல்: 6 | |
7 | தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற் காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா வாமாண் கலையல்குல் மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர் நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே (7) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > வாய்பாடு > பாடல்: 7 | |
8 | தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால் எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகும் இனியவற்றுட் கண்ணிய பூவினங் காய்ச்சீ ரனைய கனியடொக்கும் ஒண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கும் ஒண்தளைக்கே (8) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > வாய்பாடு > பாடல்: 8 | |
9 | குன்றக் குறவன் அகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக் கொன்று முதாரணம் பூந்தா மரையென்ப ஓரசைச்சீர் நன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க் கன்றதென் னாரள்ளற் பள்ளத்தி னோடங்கண் வானத்துமே (9) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > வாய்பாடு > பாடல்: 9 | |
10 | தண்சீர் தனதொன்றில் தன்தளை யாந்தண வாதவஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்துவல் லோர்வகுத்த வெண்சீர் விகற்பங் கலித்தளை யாய்விடும் வெண்தளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் ஒண்ணுதலே (10) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தளை > பாடல்: 10 | |
11 | திருமழை உள்ளார் அகவல் சிலைவிலங் காகும்வெள்ளை மருளறு வஞ்சிமந் தாநிலம் வந்துமை தீர்கலியின் தெரிவுறு பந்தநல் லாய்செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப துரிமையின் கண்ணின்மை ஓரசைச் சீருக் குதாரணமே (11) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தளை > பாடல்: 11 | |
12 | குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர் அறைதரு காலை அளவொடு நேரடி ஐயருசீர் நிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பணைத்தோள் கறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே (12) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > அடி > பாடல்: 12 | |
13 | திரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து விரிக்கு நெடிலடி வேனெடுங் கண்ணிவென் றான்வினையின் இரைக்குங் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்குமற்றும் கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் கழிநெடிலே (13) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > அடி > பாடல்: 13 | |
14 | வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற் கெள்ளப் படாகலிக் கீரிரண் டாகும் இழிபுரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமையண் போதலைத்த கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே (14) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > நான்கு பாக்களுக்கும் அடியின் சிறுமையும் பெருமையும். > பாடல்: 14 | |
15 | அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு குறித்தங் குரைப்பின் முதுகுறைந் தாங்குறை யாக்கலியின் திறத்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை புறத்தாழ் கருமென் குழல்திரு வேயன்ன பூங்கொடியே (15) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > நான்கு பாக்களுக்கும் அடியின் சிறுமையும் பெருமையும். > பாடல்: 15 | |
16 | எழுவா யெழுத்தொன்றின் மோனை இறுதி இயைபிரண்டாம் வழுவா எழுத்தொன்றின் மாதே எதுகை மறுதலைத்த மொழியான் வரினு முரணடி தோறு முதன்மொழிக்கண் அழியா தளபெடுத் தொன்றுவ தாகும் அளபெடையே (16) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 16 | |
17 | அந்த முதலாத் தொடுப்பதந் தாதி அடிமுழுதும் வந்த மொழியே வருவ திரட்டை வரன்முறையான் முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால் செந்தொடை நாமம் பெறுநறு மென்குழல் தேமொழியே (17) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 17 | |
18 | மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக் கேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய ஓவிலந் தாதி உலகுட னாமொக்கு மேயிரட்டை பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே (18) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 18 | |
19 | இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவதும் ஒன்றின்முற் றாமென்ப மற்றவையே (19) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 19 | |
20 | மோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற் கேனை யெதுகைக் கினம்பொன்னி னன்ன இனிமுரனிற் கான விகற்பமுஞ் சீறடிப்பேர தளபெடையின் தான விகற்பமுந் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே (20) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 20 | |
21 | கந்தமுந் தேனுஞ் சுருக்கமுங் காதற் குறில்குறிலே சந்தமுந் தீரசை தேமாத்தண் குன்றந்தண் சீர்திருவுங் கொந்தவிழ் கோதாய் குறளடி வெள்ளைக் கறத்தெழுவாய் அந்தமு மாவும் இருசீரு மோனையு மாமுறுப்பே (21) யாப்பருங்கலக்காரிகை > உறுப்பியல் > தொடை > பாடல்: 21 | |
22 | வெண்பா அகவல் கலிப்பா அளவடி வஞ்சியென்னும் ஒண்பா அடிகுறள் சிந்தென் றுரைப்ப ஒலிமுறையே திண்பா மலிசெப்பல் சீர்சால் அகவல்சென் றேங்குதுள்ளல் நண்பா அமைந்த நலமிகு தூங்கல் நறுநுதலே (22) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > பாவுக்குரிய அடியும் ஓசையும் > பாடல்: 22 | |
23 | வளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங் களம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோல் துளங்கிடை மாதே சுறமறி தென்னலத் தின்புலம்பென் றுளங்கொடு நாவலர் ஓதினர் வஞ்சிக் குதாரணமே (23) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > பாவுக்குரிய அடியும் ஓசையும் > பாடல்: 23 | |
24 | ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட் சீரிய வான்றனிச் சொல்லடி முய்ச்செப்ப லோசைகுன்றா தோரிரண்டாயும் ஒருவிகற் பாயும் வருவதுண்டேல் நேரிசை யாகு நெறிசுரி பூங்குழல் நேரிழையே (24) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > குறள்வெண்பா நேரிசை வெண்பா > பாடல்: 24 | |
25 | ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல் இன்றி நடப்பின· தின்னிசை துன்னும் அடிபலவாய்ச் சென்று நிகழ்வ ப·றொடை யாஞ்சிறை வண்டினங்கள் துன்றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே (25) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > இன்னிசை வெண்பா, ப·றொடை வெண்பா > பாடல்: 25 | |
26 | நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால் நேரிசை யின்னிசைச் சிந்திய லாகு நிகரில்வெள்ளைக் கோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே (26) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > சிந்தியல் வெண்பா, வெண்பாவின் இறுதியடி > பாடல்: 26 | |
27 | அந்தமில் பாத மளவிரண் டொத்து முடியின்வெள்ளைச் செந்துறை யாகுந் திருவே யதன்பெயர் சீர்பலவாய் அந்தங் குறைநவுஞ் செந்துறைப் பாட்டி னிழிபுமங்கேழ் சந்தஞ் சிதைத்த குறளுங் குறளினத் தாழிசையே (27) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > குறள் வெண்செந்துறை, குறட்டாழிசை > பாடல்: 27 | |
28 | மூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத் தான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண் டாழிசையே மூன்றடி யாய்வெள்ளை போன்று மூன்றிழி பேழுயர்வாய் ஆன்றடி தாஞ்சில அந்தங் குறைந்திறும் வெண்டுறையே (28) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > வெண்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் > பாடல்: 28 | |
29 | கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர் இடைபல குன்றின் இணைக்குற ளெல்லா அடியுமொத்து நடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத் தடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே (29) செய்யுளியல் > நான்குவகை ஆசிரியப்பா > பாடல்: 29 | |
30 | தருக்கியல் தாழிசை மூன்றடி யப்பன நான்கடியாய் எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே சுருக்கடி யாயுந் துறையாங் குறைவில்தொல் சீரகவல் விருத்தங் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே (30) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > ஆசிரியத் தாழிசை, துறை, விருத்தம் > பாடல்: 30 | |
31 | தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய் நிரலொன்றி னேரிசை யத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோல் மரபொன்று நேரடி முச்சீர் குறணடு வேமடுப்பின் அரவொன்று மல்கு லதம்போ தரங்கவொத் தாழிசையே (31) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா > பாடல்: 31 | |
32 | அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல் வசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட் டிசைதன தாகியும் வெண்பா இயந்துமின் பான்மொழியாய் விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே (32) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > வண்னக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா > பாடல்: 32 | |
33 | தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய் மரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைந்தோள் அரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக் குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே (33) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > கொச்சகக் கலிப்பாவின் வகை > பாடல்: 33 | |
34 | அடிவரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற் கடிதலில் லாக்கலித் தாழிசை யாகுங் கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது நேரடி யிரண்டாய் விடினது வாகும் விருத்தந் திருத்தகு மெல்லியலே (34) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் > பாடல்: 34 | |
35 | குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித் துறையரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான் கறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து மறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே (35) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > வஞ்சித் தாழிசை, துறை, விருத்தம் அதன் ஈறு > பாடல்: 35 | |
36 | பண்பார் புறநிலை பாங்குடை கைக்கிளை வாயுறைவாழ்த் தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பால் மொழிமட வாய்மருட் பாவெனும் வையகமே (36) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > மருட்பா > பாடல்: 36 | |
37 | வெண்பா வளம்பட வீரடி யன்றுட னேரிசையும் கண்பானல் போன்மயி லந்தமின் மூன்றுங் கடைதருக்கி நண்பார் தரவொன் றசைதர வேயடி யோடுகுறள் பண்பார் புறநிலை செய்யு ளியலென்ப பாவலரே (37) யாப்பருங்கலக்காரிகை > செய்யுளியல் > செய்யுளியற் செய்யுட்களின் முதல்நினைப்புக் காரிகை > பாடல்: 37 | |
38 | சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉஅளபோ டாகு மறிவ ரலகு பெறாமை ஐ காரநைவேல் ஓருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம் வாரும் வடமுந் திகழு முகிழ்முலை வாணுதலே (38) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 38 | |
39 | விட்டிசைத் தல்லான் முதற்கண் தனிக்குறில் நேரசையென் றாட்டப் படாததற் குண்ணா னுதாரணம் ஓசைகுன்றா நெட்டள பாய்விரி னேர்நேர் நிரையடு நேரசையாம் இட்டதி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே (39) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 39 | |
40 | மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந் தாஞ்சீ ரடையா வகவ லகத்துமல் லாதவெல்லாந் தாஞ்சீர் மயங்குந் தளையு மதேவெள்ளைத் தன்மைகுன்றிப் போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே (40) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 40 | |
41 | இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான் மயக்கப்படா வல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல் கயற்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான் முயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே (41) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 41 | |
42 | அருகிக் கலியோ டகவல் மருங்கினைஞ் சீரடியும் வருதற் குரித்தர் வான்றமிழ் நாவலர் மற்றொருசார் கருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென் றிரணத் தொடைக்கு மொழிவர் இடைப்புணர் வென்பதுவே (42) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 42 | |
43 | வருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மோனையுமென் றொருக்கப் பெயரா னுரைக்கப் படுமுயி ராசிடையிட் டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்றா மெழுத்துமொன்றி நிரக்கு மெதுகையென் றாலுஞ் சிறப்பில நேரிழையே (43) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 43 | |
44 | சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு மூன்றடியே தரங்கக்கும் வண்ணகத் குந்தர வாவது தாழிசைப்பா சுருங்கிற் றிரண்டடி யோக்க மிரட்டி சுரும்பிமிருந் தரங்கக் குழலாய் சுருங்குந் தரவினிற் றாழிசையே (44) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 44 | |
45 | பொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருந்தி இருள்சேர் விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியழிந்த மருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப் பொருள்கோள் குறிப்பிசை யப்புங் குறிக்கொள் பொலங்கொடியே (45) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 45 | |
46 | எழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந திழுக்கி லடிதொடை நாற்பதின் மூன்றைந்து பாவினமுன் றொழுக்கிய வண்ணங்க ணூறென்ப தொண்பொருள் கோளிருமூ வழுக்கில் விகாரம் வனப்பெட் டியாப்புள் வகுத்தனவே (46) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன > பாடல்: 46 | |
47 | சீரொடு விட்டிசை மாஞ்சீர் ரியற்றளை சேர்ந்தருகி வாரடர் கொங்கை வருக்கஞ் சுருங்கிற்று வான்பொருளுஞ் சீரிய தூங்கேந் தடுக்குச் சிறந்த வெழுத்துமன்றே ஆரும் ஒழிபியற் பாட்டின் முதல்நினைப் பாகுமன்றே (47) யாப்பருங்கலக்காரிகை > ஒழிபியல் > ஒழிபியல் செய்யுட்களின் முதனினைப்புக் காரிகை > பாடல்: 47 |