திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | ||
1 | அம்மைஅப்ப ரேஉலகுக்(கு) அம்மைஅப்பர் என்றுஅறிக அம்மைஅப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மைஅப்பர் எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 1 | |
2 | தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத் தம்மில் தலைப்படுதல் தாம் உணரின் - தம்மில் நிலைப்படுவர் ஓர் இருவர் நீக்கிநிலை யாக்கித் தலைப்படுவர் தாம் அத் தலை திருக்களிற்றுப்படியார் > பாடல்: 2 | |
3 | என்அறிவு சென்றளவில் யான் இன்று அறிந்தபடி என்அறிவில் ஆர்அறிக என்றுஒருவன் - சொன்னபடி சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு அதனைச் சொல்லக்கேள் நான் உனக்குச் சொல் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 3 | |
4 | அகளமய மாய்நின்ற அம்பலத்துஎம் கூத்தன் சகளமாய் போல் உலகில் தங்கி - நிகளமாம் ஆணவ மூல மலம் அகல ஆண்டனன் காண் மாணவக என்னுடனாய் வந்து திருக்களிற்றுப்படியார் > பாடல்: 4 | |
5 | ஆகமங்கள் எங்கே அறுசமயம் தான் எங்கே யோகங்கள் எங்கே உணர்வுகள்எங்கே - பாகத்து அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யார் அறிவார் பேசு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 5 | |
6 | சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல் தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 6 | |
7 | இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில் நின்ற மலம் அனைத்தும் நீக்குவது இங்கு - என்றால் உருவுடையான் அன்றே உரு அழியப் பாயும் உரு அருள வல்லான் உரை திருக்களிற்றுப்படியார் > பாடல்: 7 | |
8 | கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே அண்டத்தின் அப்புறத்த(து) என்னாதே - அண்டத்தின் அப்புறமும் இப்புறமும் ஆரறிவும் சென்றறியும் எப்புறமும் கண்டவர்கள் இன்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 8 | |
9 | அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச் சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதுஇலை - இன்று இதனை எவ்வாறு இருந்தது என்(று) எவ்வண்ணம் சொல்லுகேன் அவ்வா(று) இருந்த(து) அது திருக்களிற்றுப்படியார் > பாடல்: 9 | |
10 | ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்(கு) ஒன்றும் குறியொன்(று) இலாமையினால் - ஒன்றோ(டு) உவமிக்கல் ஆவதுவும் தாளில்லை ஒவ்வாத் தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 10 | |
11 | ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை மாற்றிஅவ் வாற்றால் மறித்தால்போல் - தோற்றிப் புலன்கள் எனப் போதம் புறம்பொழியும் நம்தம் மலங்கள் அற மாற்றுவிக்கும் வந்து திருக்களிற்றுப்படியார் > பாடல்: 11 | |
12 | பாலைநெய்தல் பாடியதும் பாம்பு ஒழியப் பாடியதும் காலனை அன்(று) ஏவிக் கராம்கொண்ட - பாலன் மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம் கரணம்போல் அல்லாமை காண் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 12 | |
13 | தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின் தாங்களே சட்டஉறங்குவர்கள் - ஆங்கு அதுபோல் ஐயன் அருட்கடைக்கண் ஆண்ட தற்பின் அப்பொருளாய்ப் பைய விளையுமெனப் பார் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 13 | |
14 | உள்ள முதல் அனைத்தும் ஒன்ற உருகவரில் உள்ளம் உருகவந்து உன்னுடனாம் - தெள்ளி உணரும் அவர் தாங்கள் உளராக என்றும் புணரவர நில்லாப் பொருள் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 14 | |
15 | நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால் நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால் ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் ஆரேனும் காணா அரன் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 15 | |
16 | மெல்வினையே என்ன வியனுலகில் ஆற்றரிய வல்வினையே என்ன வரும் இரண்டும் - சொல்லில் சிவதன்ம மாம் அவற்றிற் சென்றதிலே செய்வாய் பவகன்மம் நீங்கும் படி திருக்களிற்றுப்படியார் > பாடல்: 16 | |
17 | ஆதியை அர்ச்சித்தற்(கு) அங்கமும் அங்கங்கே தீதில் திறம்பலவும் செய்வனவும் - வேதியனே! நல்வினையாம் என்றே நமக்கும் எளி தானவற்றை மெல்வினையே என்றதுநாம் வேறு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 17 | |
18 | வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள் கரங்களினால் அன்றுகறி யாக்க - இரங்காதே கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை வல்வினையே என்றதுநாம் மற்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 18 | |
19 | பாதகம் என்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்பக் கண்டு ஈசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தன்செயலால் தான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 19 | |
20 | செய்யில் உகுத்த திருப்படி மாற்றதனை ஐயஇது அமுது செய்கென்று - பையஇருந்து ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி யறுத்தவரை நாட்டியுரை செய்வதென்னோ நாம் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 20 | |
21 | செய்யும் செயலே செயலாகச் சென்றுதமைப் பையக் கொடுத்தார் பரங்கெட்டார் - ஐயா உழவும் தனிசும் ஒருமுகமே ஆனால் இழவுண்டோ சொல்லாய் இது திருக்களிற்றுப்படியார் > பாடல்: 21 | |
22 | ஆதார யோகம் நிராதார யோகம் என மீதானத்(து) எய்தும் விதியிரண்டே - ஆதாரத்(து) ஆக்கும் பொருளாலே ஆக்கும் பொருளாம் ஒன்(று) ஆக்காப் பொருளேஒன் றாம் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 22 | |
23 | ஆக்கி ஒருபொருளை ஆதாரத்(து) அப்பொருளை நோக்கி அணுவில் அணுநெகிழப் - பார்க்கில் இவனாகை தான் ஒழிந்திட்(டு) ஏகமாம் ஏகத்(து) அவனாகை ஆதார மாம் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 23 | |
24 | கொண்ட(து) ஒரு பொருளைக் கோடிபடக் கூறுசெயின் கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் - கொண்ட இருபொருளும் அன்றியே இன்ன(து) இது வென்னாது ஒருபொருளே ஆயிருக்கும் உற்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 24 | |
25 | அஞ்செழுத்து மேஅம்மை அப்பர்தமைக் காட்டுதலால் அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றறிந்(து) - அஞ்செழுத்தை ஓதப்புக்(கு) உள்ள மதியும் கெடில் உமைகோன் கேதமற வந்தளிக்கும் கேள் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 25 | |
26 | ஆக்கப் படாத பொருளாய் அனைத்தினிலும் தாக்கித்தான் ஒன்றோடும் தாக்காதே - நீக்கி உடன் நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய் நிற்கை நிராதார மாம் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 26 | |
27 | காண்கின்றது ஓர்பொருளைக் காண்கின்ற யோகிகளே காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் - காண்கின்றார் காண்பானும் காணப் படும்பொருளும் அன்றியே காண்கையினால் கண்டனரே காண் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 27 | |
28 | பேசாமை பெற்றதனில் பேசாமை கண்டனரைப் பேசாமை செய்யும் பெரும்பெருமான் - பேசாதே எண்ணொன்றும் வண்ண மிருக்கின்ற யோகிகள்பால் உள்நின்றும் போகான் உளன் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 28 | |
29 | ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித் தேட்டற்று நின்ற இடம் சிவமாம் - நாட்டற்று நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத் தேடுமிடம் அன்று சிவம் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 29 | |
30 | பற்றினுள் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப் பற்றுவிடில் அந்நிலையே தானே பரமாகும் மற்றும் இது சொன்னேன் மதி திருக்களிற்றுப்படியார் > பாடல்: 30 | |
31 | உணராதே யாதும் உறங்காதே உன்னிப் புணராதே நீபொதுவே நிற்கில் - உணர்வரிய காலங்கள் செல்லாத காலத்துடன் இருத்தி காலங்கள் மூன்றினையும் கண்டு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 31 | |
32 | அறிவறிவாய் நிற்கில் அறிவுபல வாம் என்று அறிவின் அறிவு அவிழ்த்துக் கொண்டு அவ் - வறிவினராய் வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவக! தாழ்ந்தமணி நாவேபோல் தான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 32 | |
33 | ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின் ஓசை வழியேசென்று ஒத்தொடுங்கில் - ஓசையினில் அந்தத்தா னத்தான் அரிவையுடன் அம்பலத்தே வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து திருக்களிற்றுப்படியார் > பாடல்: 33 | |
34 | சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால் சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு கெடஒழுகின் நல்ல சமாதியுமாம் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 34 | |
35 | அன்றி வரும் ஐம்புலனும் நீயும் அசையாதே நின்றபடி யேநிற்க முன்னிற்கும் - சென்று கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும் ஒருமகள்தன் கேள்வன் உனக்கு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 35 | |
36 | உண்டெனில் உண்டாகும் இல்லாமை; இல்லைஎனில் உண்டாகும்; ஆனமையின் ஓரிரண்டாம் - உண்டு இல்லை என்னும் இவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை உன்னில் அவன் உன்னுடனே ஆம் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 36 | |
37 | தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும் மூல உடம்பாம் முதல்நான்கும் - மேலைச் சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த பவமாம் பரிசறுப்பார் பார் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 37 | |
38 | எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய அத்தனையும் சென்றங்கு அளவாதே - சித்தம் எனும் தூதுவனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனில் பாதிதனைக் கும்பிடலாம் பார் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 38 | |
39 | சாம்பொழுதும் ஏதும் சலமில்லை; செத்தாற்போல் ஆம்பொழுதிலே அடைய ஆசையறில் - சோம்புதற்குச் சொல்லும் துணையாகும் சொல்லாத தூய்நெறிக்கண் செல்லும் துணையாகும் சென்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 39 | |
40 | வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால் வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது - வேண்டின் அது வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக வேண்டாமை வேண்டுமவன் பால் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 40 | |
41 | அரண உணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றில் கரணமுங் காலும் கை கூடும் - புரணமது கூடாமை யும்கூடும் கூடுதலும் கூட்டினுக்கு வாடாமை யும்கூடும் வந்து திருக்களிற்றுப்படியார் > பாடல்: 41 | |
42 | இன்றுஇங்கு அசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும் சென்று தொடரும் அவன் சென்றிடத்தே - என்றும் தான் தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ மாதொருகூறு அல்லனோ மற்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 42 | |
43 | அநாதி சிவனுடைமை யால் எவையும் ஆங்கே அநாதியெனப் பெற்ற அணுவை - அநாதியே ஆர்த்த துயர் அகல அம்பிகையோடு எவ்விடத்தும் காத்தல் அவன்கடனே காண் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 43 | |
44 | தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத் தாம்வணங்கித் தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு பூவாக்கிப் பூவழியா மல்கொடுத்துப் பூசித்தால் ஓவாமை யன்றே உடல் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 44 | |
45 | தன்னைப் பெறுவதின்மேல் பேறில்லைத் தான் என்றும் தன்னைத்தான் பெற்றவன்தான் ஆரென்னில் - தன்னாலே எல்லாந்தன் உட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே எல்லாமாய் நிற்கும் இவன் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 45 | |
46 | துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில் இன்பமாம் தன்வசனாய்த் தானிருக்கில் - என்பதனால் நின்வசனா யேஇருக்கின் நின்னுடனாம் நேரிழையாள் தன்வசனா யேயிருப்பன் தான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 46 | |
47 | செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ ஒத்தாரே யோகபர ரானவர்கள் - எத்தாலும் ஆராத வக்கரணத் ஆர்ப்புண்டுஇங்கு அல்லாதார் பேராமற் செல்வர்அதன் பின் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 47 | |
48 | கண்ணும் கருத்தும் கடந்ததொரு பேறேயும் கண்ணும் கருத்தும் களிகூர - நண்ணி வடம் அடக்கி நிற்கும் வடவித்தே போல உடனடக்கி நிற்பார்கள்காண் உற்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 48 | |
49 | வானகமும் மண்ணகமும் ஆய்நிறைந்த வான்பொருளை ஊனகத்தே உன்னுமதென் என்றனையேல் - ஏனகத்து வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம் ஆதனமே அன்றோ அதற்கு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 49 | |
50 | கல்லில் கமரில் கதிர்வாளில் சாணையினில் வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லும் அகமார்க்கத் தால் அவர்கள் மாற்றினர்காண் ஐயா! சகமார்க்கத் தால் அன்றே தான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 50 | |
51 | உள்ளும் புறம்பும் நினைப்பொழியில் உன்னிடையே வள்ளல் எழுந்தருளும் மாதினொடும் - தெள்ளி அறிந்தொழிவாய் அன்றியே அன்புடையை ஆயின் செறிந்தொழிவாய் ஏதேனும் செய் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 51 | |
52 | கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்றமையால் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் - கண்ணப்பர் தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்(று) ஆரறியும் அன்பன் றது திருக்களிற்றுப்படியார் > பாடல்: 52 | |
53 | அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை வேந்தனார்க்(கு) இன்னமுதம் ஆயிற்றே மெய்யன்பில் சேந்தனார் செய்த செயல் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 53 | |
54 | சுரந்த திருமுலைக்கே துய்ய சிவ ஞானம் சுரந்துண்டார் பிள்ளைஎனச் சொல்லச் - சுரந்த தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த மனமுடையாள் அன்பிருந்த வாறு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 54 | |
55 | அன்பேஎன் அன்பேஎன்(று) அன்பால் அழுதரற்றி அன்பேஅன் பாக அறிவழியும் - அன்பன்றித் தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை சாற்றும் பழமன்றே தான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 55 | |
56 | எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னறிவு செல்லும் இடத்தளவும் சென்றறிந்தேன் - வல்லபடி வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள் ஏதமறக் கண்ட திது திருக்களிற்றுப்படியார் > பாடல்: 56 | |
57 | வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம் வித்தும் அதன் அங்குரமும் மெய்உணரில் - வித்து அதனில் காணாமையால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள் பேணாமையால் அற்றார் பேறு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 57 | |
58 | ஒன்றன்று இரண்டன்று உளதன்று இலதன்று நன்றன்று தீதன்று நானன்று - நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று தலையன்று அடியன்று தான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 58 | |
59 | செய்யாச் செயலையவன் செய்யாமை கண்டுதனைச் செய்யாச் செயலிற் செலுத்தினால் - எய்யாதே மாணவக! அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும் ஆணவமும் இத்தால் அறி திருக்களிற்றுப்படியார் > பாடல்: 59 | |
60 | ஏதேனும் காலமுமாம் ஏதேனும் தேசமுமாம் ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும் செய்வான் ஒருவனுமாம் செய்யாச் செயலதனைச் செய்யாமை செய்யும் பொழுது திருக்களிற்றுப்படியார் > பாடல்: 60 | |
61 | செய்தற் கரிய செயல்பலவும் செய்து சிலர் செய்தற் கரியதனை எய்தினார்கள் - ஐயோநாம் செய்யாமை செய்து செயலறுக்கலாய் இருக்கச் செய்யாமை செய்யாத வாறு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 61 | |
62 | இப்பொருள்கள் யாதேனும் ஏதேனினும் ஒன்றுசெய்தல் எப்பொருளும் செய்யாது ஒழிந்திருத்தல் - மெய்ப் பொருளைக் கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெல்லாம் உண்டிருப்ப தென்னோ உரை திருக்களிற்றுப்படியார் > பாடல்: 62 | |
63 | வீட்டிலே சென்று வினையொழிந்து நின்றிடில் என் நாட்டிலே நல்வினைகள் செய்திடில் என் - கூட்டில்வாள் சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்விசெய்த மாத்திரமே யாம்கண்டாய் வந்து திருக்களிற்றுப்படியார் > பாடல்: 63 | |
64 | சிவன்முதலே அன்றி முதலில்லை என்றும் சிவனுடையது என்னறிவ தென்றும் - சிவனவன(து) என்செயல தாகின்றது என்றும் இவையிற்றைத் தன்செயலாக் கொள்ளாமை தான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 64 | |
65 | இன்று இச் சமயத்தில் அல்லதுமற்று ஏழையுடன் ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் - இன்று இங்கே அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவரார் எங்கும் இலை கண்டாய் இது திருக்களிற்றுப்படியார் > பாடல்: 65 | |
66 | விரிந்தும் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டும் தெரிந்தும் தெரியாதும் நிற்பர் - தெரிந்தும் தெரியாது நிற்கின்ற சேயிழைபால் என்றும் பிரியாது நின்றவனைப் பெற்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 66 | |
67 | ஆதனமும் ஆதனியும் ஆய்நிறைந்து நின்றவனைச் சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் - சேதனனைச் சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர் ஏதமறக் கண்டவர்கள் இன்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 67 | |
68 | தாம் அடங்க இந்தத் தலம் அடங்கும் தாபதர்கள் தாம் உணரில் இந்தத் தலம் உணரும் - தாம் முனியில் பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும் நாமடந்தை நில்லாள் நயந்து திருக்களிற்றுப்படியார் > பாடல்: 68 | |
69 | துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும் பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும் ஆக்கியிடும் அன்பர்க் கவன் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 69 | |
70 | ஓடம் சிவிகை உலவாக் கிழி அடைக்கப் பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடுஎதிர்வெப்பு என்புக்கு உயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்குபுகழ்த் தென்புகலி வேந்தன் செயல் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 70 | |
71 | கொல்கரியின் நீற்றறையின் நஞ்சின் கொலை தவிர்த்தல் கல்லே மிதப்பாய்க் கடல்நீந்தல் - நல்ல மருவார் மறைக்காட்டில் வாசல்திறப் பித்தல் திருவாமூ ராளி செயல் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 71 | |
72 | மோகம் அறுத்திடில்நாம் முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையர்பால் தூதாகப் போகவிடும் வன்தொண்டன் தொண்டுகளை ஏதாகச் சொல்வேன் யான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 72 | |
73 | பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத் தூயதிரு வாய்மலரால் சொற்செய்து - மாயக் கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய் திருவாத ஊராளும் தேன் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 73 | |
74 | அம்மையிலும் இம்மையிலும் அச்சம் தவிர்ந்தடியார் எம்மையுமாய் எங்கும் இயங்குதலால் - மெய்ம்மைச் சிவயோகமே யோக அல்லாத யோகம் அவயோகம் என்றே அறி திருக்களிற்றுப்படியார் > பாடல்: 74 | |
75 | மன்னன் அருள் எவ்வண்ணம் மானுடர்பால் மாணவக! அன்ன வகையது அரன் அருளும் - என்னில் அடியவரே எல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில் அடியவரே எல்லாம் அறி திருக்களிற்றுப்படியார் > பாடல்: 75 | |
76 | உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம் அடங்கத்தம் பேரின்பத்து ஆக்கில் - தொடங்கி முளைப்பதும் ஒன் றில்லை முடிவதும் ஒன் றில்லை இளைப்பதும் ஒன் றில்லை இவர் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 76 | |
77 | பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன் ஓரின்பத்துஉள்ளானை உள்ளபடி - பேரின்பம் கண்டவரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம் உண்டவரே உண்டார் சுவை திருக்களிற்றுப்படியார் > பாடல்: 77 | |
78 | நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும் நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும் - நங்கையினும் நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறும் இதுகாண் எம்பெருமா னார்தம் இயல்பு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 78 | |
79 | பொன்நிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் - செந்நிறத்தள் எந்நிறத்த ளாய் இருப்பள் ஏங்கள் சிவபதியும் அந்நிறத்தனாய் இருப்பன் ஆங்கு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 79 | |
80 | தாரத்தோடு ஒன்றாவர் தாரத்து ஓர் கூறாவர் தாரத்தோடு எங்கும் தலைநிற்பர் - தாரத்தின் நாதாதத் தேஇருப்பர் நால் தானத் தேஇருப்பர் வேதாந்தத்தே இருப்பர் வேறு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 80 | |
81 | ஒன்றுரைத்தது ஒன்றுரையாச் சாத்திரங்கள் ஒன்றாக நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் - இன்றுரைக்க என்னால் இயன்றிடுமோ என்போல்வார் ஏதேனும் சொன்னால்தான் ஏறுமோ சொல் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 81 | |
82 | யாதேனும் காரணத்தால் எவ்வுலகில் எத்திறமும் மாதேயும் பாகன் இலச்சினையே - ஆதலினால் பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய் பேதாபே தம்செய்வாய் பின் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 82 | |
83 | நின்றபடி நின்றவர்கட்கு அன்றி நிறம்தெரியா மன்றினுள் நின்று ஆடல் மகிழ்ந்தானும் - சென்றுடனே எண்ணுறும் ஐம் பூதம்முதல் எட்டுருவாய் நின்றானும் பெண்ணுறநின்று ஆடும் பிரான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 83 | |
84 | சிவமே சிவமாக யான்நினைந்தாற் போலச் சிவமாகியே இருப்பது அன்றிச் - சிவமென்று உணர்வாரும் அங்கே உணர்வழியச் சென்று புணர்வாரும் உண்டோ புவி திருக்களிற்றுப்படியார் > பாடல்: 84 | |
85 | அதுஇது என்றும் அவன் நானே என்றும் அதுநீயே ஆகின்றாய் என்றும் - அதுவானேன் என்றும்-தமையுணர்ந்தார் எல்லாம் இரண்டாக ஒன்றாகச் சொல்வரோ உற்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 85 | |
86 | ஈறாகி அங்கே முதல் ஒன்றாய் ஈங்கிரண்டாய் மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய் உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும் கடனாய் இருக்கின்றான் காண் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 86 | |
87 | உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம் உன்னுடைய தென்னாய் நீ உற்றனையோ - மன்னுயிர்கள் அவ்வகையே காண் இங்(கு) அழிவதுவும் ஆவதுவும் செய்வகையே நின்றசிவன் பால் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 87 | |
88 | அவனே அவனி முதலாயி னானும் அவனே அறிவாய்நின் றானும் - அவனேகாண் ஆணாகிப் பெண்ணாய் அலியாகி நின்றானும் காணாமை நின்றானும் கண்டு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 88 | |
89 | இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்தும் கண்டாயோ அன்றுதான் நானுன்னைக் கண்டேனோ - என்றால் அருமாயை ஈன்றவள் தன் பங்கனையார் காண்பார் பெருமாயைச் சூழல் பிழைத்து திருக்களிற்றுப்படியார் > பாடல்: 89 | |
90 | கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும் கடல் அளக்க வாராதாற் போலப் - படியில் அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம் கருத்துக்குச் சேயனாய்க் காண் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 90 | |
91 | சிவன் எனவே தேறினன்யான் என்றமையால் இன்றும் சிவன் அவனி வந்தபடி செப்பில் - அவனிதனில் உப்பெனவே கூர்மை உருச்செய்யக் கண்டமையால் அப்படியே கண்டாய் அவன் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 91 | |
92 | அவன் இவனாய் நின்ற(து) அவனருளால் அல்ல(து) எவன் அவனாய் நிற்கின்ற(து) ஏழாய் - அவனிதனில் தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகில் அம்மரமாய் ஈன்றிடுமோ சொல்லாய் இது திருக்களிற்றுப்படியார் > பாடல்: 92 | |
93 | முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்(து) அத்தி பழுத்த(து) அருளென்னும் - கத்தியினால் மோகக் கொடியறுக்க முத்திப்பழம் பழுக்கும் ஏகக் கொடி எழுங்காண் இன்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 93 | |
94 | அகளத்தில் ஆனந்தத்(து) ஆனந்தி யாயே சகளத்தில் தையலுடன் தோன்றி - நிகளத்தைப் போக்குவதும் செய்தான்தன் பொன்னடிஎன் புன்தலைமேல் ஆக்குவதும் செய்தான் அவன் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 94 | |
95 | குற்றம் அறுத்(து) என்னியாட் கொண்டருளித் தொண்டனேன் உற்ற தியானத்(து) உடனுறைவர் - முற்றவரின் மாட்சியுமாய் நிற்பர்யான் மற்றொன்றைக் கண்டிடின் அக் காட்சியுமாய் நிற்பார் கலந்து திருக்களிற்றுப்படியார் > பாடல்: 95 | |
96 | ஆளுடையான் எந்தரமும் ஆளுடையா னேஅறியும் தாளுடையான் தொண்டர் தலைக்காவல் - நாளும் திருவியலூர் ஆளும் சிவயோகி இன்றுஎன் வருவிசையை மாற்றினான் வந்து திருக்களிற்றுப்படியார் > பாடல்: 96 | |
97 | தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத் தூலத்தே நின்று துலங்காமல் - காலத்தால் தாளைத்தந்து என்பிறவித் தாளை அறஇழித்தார்க்(கு) ஆளன்றி என்மா றதற்கு திருக்களிற்றுப்படியார் > பாடல்: 97 | |
98 | இக்கணமே முத்தியினை எய்திடினும் தான் நினைந்த அக்கணமே ஆனந்தம் தந்திடினும் - நற்கணத்தார் நாயகற்கும் நாயகிக்கும் நானடிமை எப்பொழுதும் ஆயிருத்தல் அன்றியிலேன் யான் திருக்களிற்றுப்படியார் > பாடல்: 98 | |
99 | என்னை உடையவன்வந்து என்னுடனாய் என்னளவில் என்னையுந்தன் ஆளாகக் கொள்ளுதலால் - என்னை அறியப் பெற் றேன் அறிந்த அன்பருக்கே ஆளாய்ச் செறியப்பெற் றேன்குழுவிற் சென்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 99 | |
100 | சிந்தையிலும் என் தன் சிரத்தினுலும் சேரும்வகை வந்தவனை மண்ணிடைநாம் வாராமல் - தந்தவனை மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதலால் ஏதுசொலி வாழ்த்துவேன் இன்று திருக்களிற்றுப்படியார் > பாடல்: 100 | |
101 | பொருளும் மனையும் அறமறந்து போகம் மறந்து புலன்மறந்து கருவி கரணம் அவைமறந்து காலம் மறந்து மலைமறந்து தருமம் மறந்து தவம்மறந்து தம்மை மறந்து தற்பரத்தோடு உருகி உருகி ஒருநீர்மை யாயே விட்டார் உய்யவந்தார். திருக்களிற்றுப்படியார் > தனிப் பாடல் > பாடல்: 101 |