தொல்காப்பியம் | Tholkaapiyam | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | ||
1 | எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 1 | |
2 | அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 2 | |
3 | அவற்றுள், அ இ உ எ ஒ என்னும் அப் பால் ஐந்தும் ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 3 | |
4 | ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 4 | |
5 | மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 5 | |
6 | நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 6 | |
7 | கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 7 | |
8 | ஔகார இறுவாய்ப் பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப. தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 8 | |
9 | னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 9 | |
10 | மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 10 |