கடவுள் வாழ்த்து
தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
குறுந்தொகை > கடவுள் வாழ்த்து > பாடல்: 0
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக