208. வாணிகப் பரிசிலன் அல்லேன்! பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண்: துறை: பரிசில். `குன்றும் மலையும் பலபின் ஒழிய, வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு` என நின்ற என்நயந்து அருளி, `ஈது கொண்டு, ஈங்கனம் செல்க, தான்` என என்னை யாங்குஅறிந் தனனோ, தாங்கரும் காவலன்? காணாது ஈத்த இப்பொருட்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித் தினை அனைத்து ஆயினும், இனிதுஅவர் துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.
புறநானூறு > பாடல்: 208
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக