இன்னா நாற்பது | Innaa Naarppathu | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | பொற்பனை வெள்ளையை@ யுள்ளா தொழுகின்னா சக்கரத் தானை மறப்பின்னா% வாங்கின்னா சத்தியான் றாடொழா தார்க்கு. @பொற்பன வெள்ளியை %மன்றப்பின்னாது இன்னா நாற்பது > கடவுள் வாழ்த்து > பாடல்: 0 | |
1 | பந்தமில் லாத மனையின் வனப்பின்னா தந்தையில் லாத புதல்வ னழகின்னா அந்தண ரில்லிருந் தூணின்னா@ வாங்கின்னா மந்திரம் வாயா விடின் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 1 | |
2 | பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா பாத்தில் புநடைவை யுடையின்னா@ வாங்கின்னா காப்பாற்றா வேந்த னுலகு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 2 | |
3 | கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா தடுமாறி வாழ்த லுயிர்க்கு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 3 | |
4 | எருதி லுழவர்க்குப் போகீர மின்னா கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா திருவுடை யாரைச் செறலின்னா வின்னா பெருவலியார்க் கின்னா செயல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 4 | |
5 | சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா உறைசேர்@ பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா முறையின்றி யாளு மரசின்னா வின்னா மறையின்றிச் செய்யும் வினை இன்னா நாற்பது > நூல் > பாடல்: 5 | |
6 | அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா@ மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா கொடும்பா டுடையார்வாய்ச் சொல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 6 | |
7 | ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா நாற்ற மிலாத மலரி னழகின்னா தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா மாற்ற மறியா னுரை இன்னா நாற்பது > நூல் > பாடல்: 7 | |
8 | பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா நகையாய நண்பினார் நாரின்மை யின்னா இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா நயமின் மனத்தவர் நட்பு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 8 | |
9 | கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா பண்ணில் புரவி பரிப்பு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 9 | |
10 | பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா பொருளில்லார் வண்மை புரிவு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 10 | |
11 | உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா@ இடனில் சிறியரோ டியர்த்தநண் பின்னா இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா கடனுடையார் காணப் புகல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 11 | |
12 | தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா வலைசுமந் துண்பான் பெருமித மின்னா புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா முலையிள்ளாள் பெண்மை விழைவு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 12 | |
13 | மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா பிணியன்னார் வாழு மனை இன்னா நாற்பது > நூல் > பாடல்: 13 | |
14 | வணரொலி@ யைம்பாலார் வஞ்சித்த லின்னா துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா உணர்வா ருணராக் கடை இன்னா நாற்பது > நூல் > பாடல்: 14 | |
15 | புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா இல்லாதார் நல்ல விருப்பின்னா@ வாங்கின்னா பல்லாரு ணாணப் படல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 15 | |
16 | உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா எண்ணிலான் செய்யுங் கணக்கு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 16 | |
17 | ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா ஈன்றாளை யோம்பா விடல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 17 | |
18 | உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா மனவறி யாளர்@ தொடர்பு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 18 | |
19 | குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா கலத்தல் குலமில் வழி இன்னா நாற்பது > நூல் > பாடல்: 19 | |
20 | மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா மூரி யெருத்தா லுழவு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 20 | |
21 | ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா ஒத்திலாப் பார்ப்பா னுரை இன்னா நாற்பது > நூல் > பாடல்: 21 | |
22 | யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா கான்யா@ றிடையிட்ட வூர் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 22 | |
23 | சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா துறையிருந் தாடை கழுவுத லின்னா அறைபறை யன்னவர்@ சொல்லின்னா வின்னா நிறையில்லான் கொண்ட தவம் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 23 | |
24 | ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா தீமை யுடையா ரயிலிருந்த னன்கின்னா காமமுதிரி னுயிர்க்கின்னா@ வாங்கின்னா யாமென் பவரொடு நட்பு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 24 | |
25 | நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா@ ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா% கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா நட்ட கவற்றினாற் சூது இன்னா நாற்பது > நூல் > பாடல்: 25 | |
26 | பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா அரியவை செய்து மெனவுரைத்த லின்னா பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா பெரியோர்க்குத் தீய செயல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 26 | |
27 | பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா கிழமை யுடையார்க்@ களைந்திடுத லின்னா வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா இளமையுண் மூப்புப் புகல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 27 | |
28 | கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா கல்லாதான் கோட்டி கொளல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 28 | |
29 | குறியறியான் மாநாக@ மாட்டுவித்த லின்னா தறியறியா% னீரின் பாய்ந்தாட& லின்னா அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா செறிவிலான் கேட்ட மறை இன்னா நாற்பது > நூல் > பாடல்: 29 | |
30 | நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா@ கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா கடும்புலி வாழு மதர் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 30 | |
31 | பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா எண்ணறியா மாந்தர்@ ஒழுக்குநாட் கூற்றின்னா மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா தண்மை யிலாளர்% பகை இன்னா நாற்பது > நூல் > பாடல்: 31 | |
32 | தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா தொன்மை யுடையார் கெடல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 32 | |
33 | கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா@ வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 33 | |
34 | ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த@ லின்னா விழுத்தகு நூலும்% விழையாதார்க் கின்னா இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா கழிப்புவாய் மண்டிலங் கொட்பு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 34 | |
35 | எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா குழலி னினிய@ மரத் தோசைநன் கின்னா குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா அழகுடையான் பேதை யெனல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 35 | |
36 | பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா கெடுமிடங் கைவிடுவார் நட்பு இன்னா நாற்பது > நூல் > பாடல்: 36 | |
37 | நறிய மலர்பெரிது நாறாமை யின்னா துறையறியா னீரிழிந்து@ போகுத லின்னா அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா சிறியார்மேற் செற்றங் கொளல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 37 | |
38 | பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா திறனிலான் செய்யும் வினை இன்னா நாற்பது > நூல் > பாடல்: 38 | |
39 | கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா மடுத்துழிப் பாடா விடல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 39 | |
40 | அடக்க முடையவன் மீளிமை யின்னா துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்காதார் சொல் இன்னா நாற்பது > நூல் > பாடல்: 40 |