வினா வெண்பா | Vinaa Venpaa | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | ||
1 | நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக் கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா நின்றவா றெவ்வாறு நீ. வினா வெண்பா > நூல் > பாடல்: 1 | |
2 | இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி மருளி நிலையருளு மானும் - கருவியிவை நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா வீங்குனரு ளாலென் பெற. வினா வெண்பா > நூல் > பாடல்: 2 | |
3 | புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள் ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா ஞானமலை யாவாய் நவில். வினா வெண்பா > நூல் > பாடல்: 3 | |
4 | கனவு கனவென்று காண்பரிதாங் காணி னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள் தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா யானவத்தை காணுமா றென். வினா வெண்பா > நூல் > பாடல்: 4 | |
5 | அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின் குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள் தாமா வறியா தடமருதைச் சம்பந்தா யாமா ரறிவா ரினி. வினா வெண்பா > நூல் > பாடல்: 5 | |
6 | சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின் மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா வென்கொண்டு காண்பேனி யான். வினா வெண்பா > நூல் > பாடல்: 6 | |
7 | உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண் தன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவி தானறிய வாரா தடமருதைச் சம்பந்தா யானறிவ தெவ்வா றினி. வினா வெண்பா > நூல் > பாடல்: 7 | |
8 | அருவே லுருவன் றுருவே லருவன் றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற் காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல் பூணுமிறைக் கென்னாம் புகல். வினா வெண்பா > நூல் > பாடல்: 8 | |
9 | இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு மொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார் ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா வன்றாகி லாமா றருள். வினா வெண்பா > நூல் > பாடல்: 9 | |
10 | ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார் தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி யோங்கியவா றெவ்வா றுரை. வினா வெண்பா > நூல் > பாடல்: 10 | |
11 | காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை காண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன் வாட்டுநெறி வாரா தவர். வினா வெண்பா > நூல் > பாடல்: 11 | |
12 | ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும் என்று மிடையி லிடமில்லை - யொன்றித் தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து பிரியாவா றெவ்வாறு பேசு. வினா வெண்பா > நூல் > பாடல்: 12 | |
13 | அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப் பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா வினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன் கனாவின்பா லெய்துவிக்குங் காண். வினா வெண்பா > நூல் > பாடல்: 13 |