38. வேண்டியது விளைக்கும் வேந்தன்! பாடியவர்: ஆவூர் மூலங் கிழார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை: பாடாண். துறை: இயன்மொழி, குறிப்பு: 'எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது. வரை புரையும் மழகளிற்றின் மிசை, வான் துடைக்கும் வகைய போல விரவு உருவின கொடி நுடங்கும் வியன் தானை விறல் வேந்தே! நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ, நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச், செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் திங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின், நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த, எம் அளவு எவனோ மற்றே? ‘இன்நிலைப் பொலம்பூங் காவின் நன்னாட் டோரும் செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை, உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும் கடவ தன்மையின், கையறவு உடைத்து’என, ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், நின்நாடு உள்ளுவர், பரிசிலர்: ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.
புறநானூறு > பாடல்: 38
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக