திருமந்திரம்

-1. விநாயகர் காப்பு

(பாடல்கள் 0 முதல் 0 வரை)

பாடல் எண்: 0

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

தமிழ் விளக்கம்:

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

English Meaning:

He who has the five hands and the elephant\'s face,
Whose tusk is even as the crescent moon,
The son of Nandi, the Flower of Wisdom,
Him I cherish in thought, His feet adore.

← அட்டவணைக்குச் செல்ல