திருமந்திரம்

105. சாமீபம்

(பாடல்கள் 1509 முதல் 1509 வரை)

பாடல் எண்: 1509

பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாச மருளான தாகும்இச் சாமீபம்
பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே. 1

தமிழ் விளக்கம்:

சாலோகம், மாயா கருவிகள், தாமே உயிர் என்று உயிரை மருட்டி அதனைத் தம் வயப்படுத்தியிருந்த நிலை நீங்கித் தாம் அதனின் வேறாய சடங்களாதலைத்தோற்றி, அதன்வயப்பட்ட நிலையை உடையது. சாமீபம், அக்கருவிகள் அருள்வயப்பட்டதாய் உயிர் இறைவனை அணுகுதற்குத்துணை செய்து நிற்கும் நிலையை உடையது. சாரூபம், அக்கருவிகள் சிவமயமாய் உயிருக்குச் சிவானந்தத்தைத் தரும் நிலையை உடையது. சாயுச்சம், அக்கருவிகள் யாவும் கழிய, உயிர் தான் நேரே சிவனைக் கூடியிருக்கும் நிலையை உடையது.

English Meaning:

In Saloka Pasa Jnana (World knowledge) becomes Pasu Jnana (Spiritual
knowledge)
In Samipa it becomes Arul Jnana (Grace-knowledge)
In Sarupa it is transformed into Pati Jnana (God-knowledge)
In Sayujya it is for ever dissolved.

← அட்டவணைக்குச் செல்ல