திருமந்திரம்

125. பக்குவன்

(பாடல்கள் 1690 முதல் 1703 வரை)

பாடல் எண்: 1690

தொழுதறி வாளர் கருதிகண் ணாகப்
பழுதறியாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே. 1

தமிழ் விளக்கம்:

குற்றத்தைப் பொருந்துதல் சிறிதும் அறியாத மேலான் ஆசிரியரை நூல்முறை வழியே வழிபட்டு அவர்பால் உய்யும் வழியை அறிபவரே நல்வழியை அறிபவராவர். அல்லாதா ரெல்லாம் ஏனைக்கெடும் வழியை அறிபவரேயாவர்.

English Meaning:

Scriptures to guide them,
The Disciples Fit
Find the blemishless Guru;
They know their job and so find the Path;
The rest are to destruction destined.

பாடல் எண்: 1691

பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி
யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 2

தமிழ் விளக்கம்:

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும் பியே அடியேன் துடித்தேன்; அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவரது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழி யும் படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.

English Meaning:

You, Supreme Lord!
Seeking You, I lost all sense of fear;
Now I wander not,
And seek not another\'s company;
Shatter, Lord, my Karmas
Uproot them from my very thoughts
And kick them off;
Grant me Your Grace.
Own me,
And make me Your slave forever.

பாடல் எண்: 1692

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. 3

தமிழ் விளக்கம்:

உள்ளமாகிய நிலத்தில் ஆசிரியராகிய உழவர் விதைக்கின்ற விதையை முளைத்து வளர ஒட்டாது தின்றொழிக்கின்ற ஐம்புல ஆசையாகிய கிருமியை உடைய மனமாகிய மேல்மண்ணை யோக முயர்ச்சியால் ஆஞ்ஞையும், அதனைக்கடந்த ஏழந்தானமும் ஆகிய வானத்தில் நின்று நோக்கும் மெய்யுணர்வாகிய வெயிலால் அக் கிருமிகளை அழித்துச்செம்மை படுத்தி அம்மனத்தைத் தம்மோடு ஓத்துவரச் செய்கின்ற அடியவருக்குச் `சிவஞானம்` என்னும் விதையை உள்ளத்தில் ஊன்றக் கொடுத்தல் தக்கது.

English Meaning:

Even as your frame still pulsates with life,
You envision high
Para the Seed of seeds;
And rally your thoughts to oneness
And stand thus in love and accord;
To such that do, He grants His Grace.

பாடல் எண்: 1693

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே. 4

தமிழ் விளக்கம்:

(இதன் பொருள் வெளிப்படை.)

English Meaning:

When you seek a Guru
Seek you one, holy and pure;
And then give him your all--
Your body, life and wealth;
And in constancy learn clear,
Not a moment distracting,
You shall sure reach Siva\'s State.

பாடல் எண்: 1694

சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே. 5

தமிழ் விளக்கம்:

`விரிச்சிகமும், கற்கடகமும் என்னும் இரண்டு ஓரைகளையுடைய `சுவாதி, விசாகம்` என்னும் இரு நட்சத்திங்கள் பொருந்திய, முன்னோர் சொல்லிய இருநாட்களே குருமொழியை உணர்தற்கு உரிய நாள்கள்` என்று மரபு நெறியின் சிறப்பை எண்ணுவாருள் அங்ஙனம் உணர்ந்து ஒழுகுவார்க்குக் கூறியதல்லது, இறைவனும் அதற்குரிய காரணம் எதனையும் எங்கும் சொல்லி வைக்கவில்லை.

English Meaning:

In the asterisms of Swati and Visakha
In the conjunction of Lagnas Vrischika and Kataka,
Of the Guru, the holy precepts you receive;
Except it be them who stand in the path of virtue
The Primal One knows none.

பாடல் எண்: 1695

தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே. 6

தமிழ் விளக்கம்:

சரியை முதலிய பணிகள் நிரம்பிவர, அதனால், சிறந்த முத்துப்பேலும் தூயதான மனத்தில் உண்டாகும் எழுச்சி காரணமாக இறைவன் அதனைத் தனக்கு இடமாகக் கொண் டருளுவான். அப்பொழுது வீணரது வெற்றிப்பாடாம் வினை நீங்கிப் போக, அப்பணிகளில் நின்றோன் சிவனது வீரக்கழலை அணிந்த திருவடியை நேரே கண்டு, அவனது அருளேயாய் நிற்பன்.

English Meaning:

When your discipline perfect be,
Your thoughts crystal pure be;
And there the beauteous Lord reside be;
Then shall Karmas all
Rooted deep unto undying weeds,
Disappear;
And you shall glimpse the Grace
Of the valorous Feet of Lord Holy.

பாடல் எண்: 1696

சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே. 7

தமிழ் விளக்கம்:

சத்துவ குணம் மிக்கவனாய், பரம்பொருளை அடைய எண்ணி, அப்பரம் பொருள் முதலிய நுண்பொருள்களின் உண்மையை அடியாகக்கொண்ட சமயங்களே `சமயங்கள்` என்னும் உணர்வு உள்ளத்தில் தோன்றப்பெற்று, தொன்று தொட்டு விடாது கட்டியுள்ள பிறவிக்கட்டிற்கு அஞ்சி அறநெறியைத் தளராது மேற்கொள்ள வல்லவனே சற்சீடன் - நன்மாணாக்கன் ஆவான்.

English Meaning:

A sattvic he is;
His thoughts centered on Finite Truth;
His vision clear through conflicting faiths;
Abhorrent of recurring cycle of births;
Straight in Dharma\'s path he easy walks;
He, sure, is disciple good and true.

பாடல் எண்: 1697

சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே. 8

தமிழ் விளக்கம்:

சிவனது திருவருள் ஆன்மாவைப் பக்குவப் படுத்தி நன்னெறியை அடைவித்தமையால், `நிலை யுடைய பொருள் நிலை யாமையுடைய பொருள்களின் இயல்புகள் யாவை` என்னும் ஆராய்ச் சியைத் தலைப்பட்டு அவற்றை உள்ளவா றுணரும் உணர்வைப் பெறுதல்பொருட்டு ஆசாரியரை அன்போடு வழிபட்டு, சிவனது ஆனந்தசத்தியில் மூழ்குதற்கண் வேட்கை மிக்கவனே சற்சீடனாவன்.

English Meaning:

He scans that which divides the Real and the Unreal
He melts in the soul of his being
And with Siva\'s Grace to guide,
He receives Jnana in devotion true;
And he humbles himself before Lord
And seeks the bliss of His Sakti;
He is the fit one, the disciple good and true.

பாடல் எண்: 1698

அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. 9

தமிழ் விளக்கம்:

என்றும் சிவனது திருவடியைத் தாங்கி நிற்கின்ற தனது சீரியதலை, நிலையாமை யுடைய பிறவித் தொடர்ச்சியின் மூலங்களைக் காய்ந்தபின் அருட் சத்தியால் ஆசாரியரை அடைந்து, `ஆசாரியரே, இன்றே அடியேனுக்கு உமது திருவடியைச் சூட்டி அருள்செய்ய வேண்டும்` என வேண்டி நின்று, அவ்வாறே திருவடி சூட்டி அருளப்பட்ட ஞானத்தால் அசைவற நிற்பவனே மலம் நீங்கிய முத்தனாவான்.

English Meaning:

Oh! my Holy Master!
Do grace me with your feet on my head,
--Thus, I prayed, this day;
And as he placed his feet
All births to vanish;
This body that was blessed thus
Received Grace of Arul Sakti
And I became a Jnani ripe,
Forever, blemish devoid.

பாடல் எண்: 1699

சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்
ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. 10

தமிழ் விளக்கம்:

சிறப்புப் பொருந்திய ஞானத்தின் கண் விருப்பம் மிக மிக, அது காரணமாகர ஞானாசிரியன்பால் அடங்காத அன்பு உளதாக, அதனால், அவ்வாசிரியன் அவன் மேல் தனது திருவடியைச் சூட்டி அருள்செய்ய, அவ்வாற்றானே, `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்கு சாதனங்களையும் முற்றி உலகியலில் நீங்கினவனே அறிவுடையோரால் `ஞானி` என ஆராய்ந்து கூறப்படும் முதிர்ந்த ஞானியாவான்.

English Meaning:

He is the master of the difficult paths four;
He is the seeker incessant of Jnana divine;
And as he placed his feet on my head,
Higher and higher, my ardour in Jnana soared,
Higher and higher, my love for Gurupara welled up.

பாடல் எண்: 1700

உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. 11

தமிழ் விளக்கம்:

உண்மை ஞானாசிரியனாயுள்ளவன் சிவ ஞானத்தை உணரத்தத்தக்க அதிபர்குவர்கட்கே அதனை முன்பு கேள்வியளவான் உணர்த்தி, அதன்பின் அவர்கள் அதனைச் சிந்தித்துத் தெளிந்த தெளிவு நிலையில் சிவனது வியாபகத்துள் அவர்களை வியாப்பியமாகச் செய்தலாகிய நிட்டையை எய்துவித்து, அந்நிட்டை நிலைபெற்ற வழி கிழக்கு முதலிய திசைப் பாகுபாடுகளுள் யாதும் இல்லாதவாறு சிவனது வியாபகத்தை முற்றுமாகத் தலைப் படுவிப்பன். அங்ஙனம் அச்செயல் அனைத்தையும் அவன் செய்வது, அனைத் துயிர்களையும் உடைய அருட் சத்தியைத் தியானித்தே.

English Meaning:

Impart divine knowledge only to those fully ripe to receive it,
Taking the disciple gently to the limits of the Infinite Vast;
You facing east or south, your disciple facing west or north
Thus instruct, the Sakti of Lord centered in mind.

பாடல் எண்: 1701

இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே. 12

தமிழ் விளக்கம்:

குருவருளை விரும்பும் மாணவனே, உன்முன் குருவாய் வந்து நிற்கும் சிவனை அங்ஙனமான சிவனாகவே கண்டு அவனது திருவடிகளில் வீழ்ந்து, ஏகாங்க திரியங்க பஞ்சாங்க சடங்க அட்டாங்கங்களாகிய ஐந்து வணக்கங்களையும் செய்து, பிறவித் துயரால் வருந்தும் உனது குறையை விண்ணப்பித்து, அச்சிவனது அருட்குணங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறிப் புகழ்ந்தபொழுது, நீயிருக்கும் சிறைக்கூடமாகிய உடம்பையே நீ என மயங்கியிருக்கும் உனது மயக்கத்தைப் போக்கி உனது உண்மையை உனக்குத் தெரிவித்து, நீ சிவத்தோடு ஒன்றாகும் நிலையை உன் அறிவு அறியும்படிச் செய்பவனே உண்மை ஞானாசிரியனாவான்.

English Meaning:

He humbles before Divine Guru
In postures five ordained;
He bewails his faults,
Praises Master\'s virtues;
Guru then shows the way of deliverance from mortal prison
And imparts Siva Jnana
He is truly the Guru that is of Sanmarga (Jnana Guru).

பாடல் எண்: 1702

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. 13

தமிழ் விளக்கம்:

காமியத்தை நிரப்பும் நெறி வேத நெறியாக, அதனை விடுத்து நிட்காமியமாவது சிவனிடத்துச் செய்யும் பத்தியே யாதலாலும், ஒழுக்கமாகிய நீரை உலகியலாகிய மடையினின்றும் மாற்றிச் சித்தாந்த நெறியாகிய மடையிற் பாய்ச்சி ஆசையை ஒழிக்கும் உண்மை வேதாந்தியே குருவாகத்தெளிந்து அவன் திருவடிகளில் தாழ்ந்து வணங்கி, அவன் வழி நிற்பவனே சற்சீடனாவன்.

English Meaning:

Vedanta is the way of renouncing desires;
And so, divert your life\'s course
And take to Siddhanta-Vedanta Way
And humble your head at the feet of Guru
That has renounced all in the Vedanta way.
Then verily are you disciple true.

பாடல் எண்: 1703

சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. 14

தமிழ் விளக்கம்:

சற்குணம் முதல் அற்புதம் ஈறாக உள்ள ஏழியல்பும் உடையவனே சற்சீடனாவான்.

English Meaning:

O! disciple true!
In virtue, truth, compassion, discrimination and love
You pursue the Holy Feet of Guru true
Constant as unto a shadow;
You then gain the nectar of Finite Jnana in its crystal clarity,
And witness the many miracles it brings in train.

← அட்டவணைக்குச் செல்ல