|
TAMILSEI.COM |
சமயம் கடந்து கடல் கடந்து எல்லோரையும் ஈர்க்கும் ஓர் வாசகமெனில் அது திருவாசகமே!
அதனால் தான் வாதவூரரின் மாணிக்க வாசகங்களை, மானுடச் சட்டை தாங்கி அந்த மகேசனே எழுதினார் போலும்!!!
அவற்றுள் நமக்கு 51 பதிகங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றைத் தேடிப் பிடித்துச் சேகரித்து, சரிபார்த்து, பாடமாக்கி, பதிப்பித்து நமக்குத் தந்திருக்கும் பல முதுபெரும் முன்னோர்களுக்கும், அறிஞர்களுக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
எம் பங்கிற்கு, இன்றைய digital உலகில், கணினியிலோ, கைத்தொலைபேசியிலோ எளிதாய் வாசிக்கும் வண்ணம் இங்கே பாட்டும், பொருளும், ஒலிவடிவும், சுலபமாய் முன்பின் செல்லும் வகையில் அமைத்திருக்கிறோம். அடியார்களும், அறிஞர்களும், ஆன்மிக நட்புகளும், முற்றோதல் அன்பர்களும் பாட்டின் பொருளுணர்ந்து திருவாசகத்தை ஓதிப் பயனடைக !!! 🙏🙏🙏
https://tamilsei.com/Thiruvaasagam
நன்றி!!!
சண்முகா, கரு.!
18Nov2023