திருமந்திரம் | Thirumanthiram

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே. 20

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் > பாடல்: 1064

She is the Lady, compassion embodied
She is Bliss--Beauty (Ananda Sundari)
Unto tamarind fruit encased in cover hard
Is my wavering heart;
Into it She poured Her benignant glance
And made it pure;
She showed me the way to Siva-state
She made me radiant in Jnana
And redeemed me.

அன்பர்களது உள்ளத் தாமரையை வண்டுபோல விரும்பி உறைகின்றவளும், ஆனந்தமே உருவாய் அழகொடு நிற் பவளும் ஆகிய திரிபுரை, எனது உள்ளம் புளிய மரத்தில் பொருந்திய பழுத்த பழம்போல ஆகும்படி அருள் நோக்கம் செய்து பக்குவப் படுத்திச் சிவஞானத்தைத் தந்து சிவத்தைப் பெறுவித்து, யான் உய்யும் வண்ணம் என்னைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 26, 2026