திருமந்திரம் | Thirumanthiram

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே. 23.

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 6. வயிரவி மந்திரம் > பாடல்: 1097

Bhairavi the Eternal, Neeli the blue-hued,
Nisachari that sojourns in dark,
Into the heart purified of Evils Three--lust, anger and ignorance
She enters
And of Herself Grace confers,
Seek Her in this world
And She will bless you.

துன்பத்தை நீக்க முன்னிற்கும் வயிரவி நீல நிறத்தை உடையவள்; இரவில் உலாவுபவள்; மனமாகிய ஒன்றும், வாக்கும் காயமுமாகிய ஏனை இரண்டும் ஒருவழிபட்டோரது உள்ளத்தில், தானே விளங்கி அருள்புரிபவள்; சிவபிரானுக்கே உரியசத்தி; அவளைத் துதித்து, அவளது நல்ல திருவருளை இவ்வுலகத்தில் பெற விரும்புங்கள்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Jun 28, 2026