Having achieved divine Mudras* three, Directed breath into the Centers three,* And coursed its rhythm in finger-measure four, -They who sat thus in yoga, Joyous at lumniscent Guru Feet, Have for ever sundered bonds all, And never be born and dead again.
சிவ குருவின் திருவடிப் பேற்றால் எல்லாப் பொருள் களும் அற்றுச் `சிவஞாதா, சிவஞானம், சிவஞேயம்` என்னும் மூன்று பொருளிலே வந்து முடிந்த தன்மையை, `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` என்னும் மூன்று வகையில் இயங்கும் பிரணவாயுவை முறைப்படி அடக்குமாற்றால் ஞேயமாகிய ஒன்றில் அடங்கச் செய்தலால் விளைந்த ஆனந்தத்தால் திரிபுடியாகிய கட்டினை அறுத்தோர் அதன்பின் பிறந்தும், இறந்தும் வருதலைச் செய்யார் முத்தி பெறுவர் என்றதாம்.