இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும் பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே இருந்திந் திரனே யெவரே வரினுந் திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 4
திருமந்திரம் > ஆறாம் தந்திரம் > 5. தவம் > பாடல்: 1627
Transfixed in mind and tortured in body Stout of heart, they perform tapas splendorous; Even though the Celestial King And others, however mighty, descend to them, And tempt them, Their determined thought on Siva firm remains.
பொறி புலன்களை அடக்கியிருந்து, உண்டி சுருக்கல் முதலியவற்றால் மெய்வருந்தி உயர்ந்த தவத்தைச் செய்து நிற்கும் பெரி யோரை மனம் கலங்கச் செய்வதற்கென்றே தமது இருப்பை வைத்து, இந்திரனேயாக, ஏனை எத்தேவரேயாக எதிர் வரினும் அப் பெரி யோர்க்கு அவர்தம் உள்ளம் சிவனிடத்தே அசையாது அழுந்தி நிற்கும்.