திருமந்திரம் | Thirumanthiram

தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே. 9

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்) > பாடல்: 1738

Formless is the Tattva primal
Formed, it is the world, animate and inanimate;
A source of pleasure then indeed it is;
Tattva is all and pervasive,
Sadasiva is Tattva (Truth) Real.

`தத்துவம்` எனப்படுவன காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலங்கள் ஆதலின், அவையே `சரம், அசரம்` என்னும் இருதிறப் பொருளாயும் பரிணமிக்கும். தத்துவங்கள் யாவும் உயிர்கட்குத் துன்பம் நீங்கி, இன்பம் தோன்றுதற் பொருட்டே உள்ளனவாம், இவ்வாறு அனைத்துப் பொருளுமாய் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் ஆவது சதாசிவலிங்கம்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Apr 28, 2026