நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை வான்அறிந் தார் அறி யாது மயங்கினர் ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? 6
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 9. திருவருள் வைப்பு > பாடல்: 1797
I have known the Lord from days bygone But the Celestials knew Him not, Doubt-tossed were they; The Lord is the Light In my fleshly body as Prana pulsates If I know Him not, who else will?
என்னுள் இருக்கின்ற இறைவனை அறிய வேண்டி யவன் யானே யன்றோ! (அந்நிலை இன்று யான் கைவரப் பெற்றேன்.) வானுலகம் ஒன்றையே அறிந்து நிற்கும் வானவர் அந்த அறிவால் தம்முள் இருக்கும் இறைவனை அறியாது மயங்குவாராயினர். ஒவ்வொருவனும் தனது உடம்பின் இயல்பையும், அந்த உடம்பினுள் உள்ள உயிரையும், அந்த உயிருக்குள் உயிராய் நின்று அதற்கு அறிவைத் தருகின்ற உள்ளொளியாகிய இறைவனையும் அறிந்து அவ்வாற்றால் பயன்பெற வேண்டியவன் அவனேயாய் இருக்க அவனவனும் அதனைச் செய்யாது கிடப்பானாயின் அவனுக்காக மேற்கூறியவைகளை யார் அறிவார்!