திருமந்திரம் | Thirumanthiram

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற 
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 15

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 11. சிவபூசை > பாடல்: 1837

My Lord, the Primal One, the Timeless Eternity,
The Holy One,
--Thus they adore Him with flowers diverse,
And in love endearing at His Feet worship,
His Grace to receive;
How then do you in prayer seek Him not?

சிவனைக் காணலுறுவார் யாவரும் அவனது திருவருள் வடிவாகிய அவனது திருவடியின் கீழ்த்தம்மைத் தாமே கட்டி வைத்து, அவனை மிக்க மலர்களைத் தொழுது துதித்தலையே செய்வர். அங்ஙனமன்றி, எனக்கு எதிர் தோன்றிக் காட்சி வழங்கியவனும், என்றும் கெடுதல் இல்லாத முதற்பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனை யாரும் தாம் இருந்த நிலையிலேயிருந்து காணமாட்டார்கள்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 26, 2026