இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய் உண்பது வாச மதுபோல் உயிர்நிலை இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி கண்புற நின்ற கருத்துள்நில் லானே. 8
திருமந்திரம் > முதல் தந்திரம் > 5 உயிர் நிலையாமை > பாடல்: 194
The bee, that nectar seeks, flies high for its flower on top And there, alone, it sucks the fragrant juice; Even so, they who seek the blessed grace divine, Aspire for the Light beyond visible reach of eyes.
தேனை விரும்புகின்ற வண்டு அதனை உண்பது மலரிடத்தே சென்று அதன்கண் வீழ்ந்தேயாம். உயிரினுடைய நிலைமையும் அத்தன்மையதே. அஃதாவது, இன்பத்தை விரும்புகின்ற உயிர் அதனைப் பெறுவது சிவனை அடைந்து அவனிடத்து அடங்கி நிற்கும் பொழுதேயாம். வண்டு தேனை உண்ண விரும்பிப் பிற இடங்களில் ஓடியிளைப்பினும் அது கிடையாததுபோல, உயிரும் இன்பம் பெற விரும்பிப் புறக்கண்வழி ஓடி இளைப்பினும் அங்ஙனம் ஓடுகின்ற உயிரில், அன்பின்ஊன்ற உள்ளெழும் சோதியாகிய (தி.12 பெ. பு. திருஞான - 835) சிவன் விளங்கமாட்டான். `எனவே, இன்பம் கிட்டாது` என்பதாம்.