திருவருட்பயன் | Thiruvarutpayan

உள்ளிருந்து காண்பவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
அகத்து உறு நோயக்கு உள்ளினர் அன்றி அதனைச்
சகத்தவருங் காண்பரோ தான்.
அகத்துறுநோயக் குள்ளின ரன்றி யதனைச்
சகத்தவருங் காண்பரோ தான்.
பொருள் : வீட்டில் ஒருவர் நோயுற்றால் அவரது நோயின் தன்மையை அவ்வீட்டினுள் உள்ளவரே அறிவார். வெளியில் உள்ள பிறர் அதனை அறிவாரோ? அறியமாட்டார். அதுபோல, உயிரிடத்துப் பொருந்திய அறியாமையாகிய நோயினது நிலையை உயிரினுள் இருப்பவனாகிய இறைவனே அறிய வல்லான். உலகத்தவராகிய பிறர் அதனை எங்ஙனம் அறிதல் இயலும்?

திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 42

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 19, 2026