திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர் தான் உணர்வோடு ஒன்றாம் தரம். | ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனொடுயிர் தானுணர்வோ டொன்றாந் தரம். |
| பொருள் : உடம்போடு சேர்ந்து நிற்பதாகிய உயிர் நிறைந்த ஞானமாகிய திருவருளோடு பிரிப்பின்றிக் கூடி வாழ்கிறது. திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போன்றது எனில், உயிரோடு கூடி வாழும் உடம்பு அந்த உயிரோடு கொண்டுள்ள ஒற்றுமையைப் போன்றது ஆகும். | |