திருவருட்பயன் | Thiruvarutpayan

உயிர் தனது வலிமையால் பெற முடியாது

பதம் பிரித்துஉள்ளபடியே
தாமே தருபவரைத் தம் வலியினால் கருதல்
ஆமே இவன் அர் அதற்கு.
தாமே தருபவரைத் தம்வலியி னாற்கருத
லாமே யிவனா ரதற்கு.
பொருள் : முதல்வன் தானே தனது கருணையினால் உயிருக்கு ஞானத்தைத் தந்து தன்னை உணர்த்தி நிற்கிறான். அங்ஙனமாக, அம்முதல்வனை உயிர் தானே தன் முயற்சியினால் அடைந்ததாகக் கருதுவது பொருந்துமோ? முதல்வனை இவ்வுயிர் தனது வலிமையால் பெறுவதற்கு என்ன உரிமையுடையது.

திருவருட்பயன் > ஏழாம் அதிகாரம் > 7. உயிர் விளக்கம் > பாடல்: 70

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 24, 2026