திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின் பின் புகுவார் முன் புகுவார் பின். | இன்புறுவார் துன்பா ரிருளி னெழுஞ்சுடரின் பின்புகுவார் முன்புகுவார் பின். |
| பொருள் : பக்குவம் வருவதற்கு முன்னே, துன்பம் தரும் இருளில் வழி காட்டி வருகின்ற திருவருள் ஒளிக்கு முன்னால் சென்றவர், பக்குவம் வந்த காலத்தில் அதன் பின்னால் செல்வர்; அவ்வாறு பின் சென்று பேரின்பமாகிய பயனை அடைவர். | |