திருவருட்பயன் | Thiruvarutpayan

பின் புகுவார் இன்புறுவார்

பதம் பிரித்துஉள்ளபடியே
இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின்
பின் புகுவார் முன் புகுவார் பின்.
இன்புறுவார் துன்பா ரிருளி னெழுஞ்சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின்.
பொருள் : பக்குவம் வருவதற்கு முன்னே, துன்பம் தரும் இருளில் வழி காட்டி வருகின்ற திருவருள் ஒளிக்கு முன்னால் சென்றவர், பக்குவம் வந்த காலத்தில் அதன் பின்னால் செல்வர்; அவ்வாறு பின் சென்று பேரின்பமாகிய பயனை அடைவர்.

திருவருட்பயன் > எட்டாம் அதிகாரம் > 8. இன்புறு நிலை > பாடல்: 71

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Apr 20, 2026