திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒள் பொருள் கண் உற்றார்க்கு உறு பயனே அல்லாது கண் படுப்போர் கைப் பொருள் போல் காண். | ஒண்பொருட்க ணுற்றார்க் குறுபயனே யல்லாது கண்படுப்போர் கைப்பொருள்போற் காண். |
| பொருள் : மெய்ப் பொருளாகிய சிவத்தில் அழுந்தினவர்களுக்கு அதனால் வரும் பேரின்பம் ஒன்று தவிர ஏனையவெல்லாம், உறங்கிப் போனவனது கையிலுள்ள பொருள் தானே நழுவுவது போலத் தாமே நீங்கிவிடும். | |