கொடிக்கவி | KodiKavi | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | ||
| 1 | ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன் றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே. கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 1 | |
| 2 | பொருளாம் பொருளேது போதேது கண்ணே திருளாம் வெளியே திரவே - தருளாளா நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி. கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 2 | |
| 3 | வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந் தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப் பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே குறிக்குமரு ணல்கக் கொடி. கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 3 | |
| 4 | அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும் பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப் பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங் கூசாமற் காட்டாக் கொடி. கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 4 | |
| 5 | அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற் கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங் கூறாமல் கூறக் கொடி. கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 5 |