நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | ||
| 1 | உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதற் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 1 | |
| 2 | உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன், - மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத் தன்ன தோயாப் பூந்துகில், பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை, சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி, துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் . . . .20 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 2 | |
| 3 | செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு . . . இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக . . .30 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 3 | |
| 4 | வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் 'கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரி¦’தன்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி .40 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 4 | |
| 5 | சூரர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன், - பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் உலறிய கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கட் கூகையடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு . . .50 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 5 | |
| 6 | உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற் கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா நிணம்தின் வாயள் துணங்கை தூங்க இருபே ருருவின் ஒருபே ரியாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து . . . .60 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 6 | |
| 7 | எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்,- சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும் செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே: செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில் திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து . . . .70 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 7 | |
| 8 | மாடமலி மறுகின் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந்து உறைதலும் உரியன் ; அதாஅன்று, வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல் வாடா மாலை ஓடையடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் . . . .80 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 8 | |
| 9 | கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே . . . .90 திருமுருகாற்றுப்படை > 2. திருச்சீர் அலைவாய் > பாடல்: 9 | |
| 10 | மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம், ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம், மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம், செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம் . .100 திருமுருகாற்றுப்படை > 2. திருச்சீர் அலைவாய் > பாடல்: 10 | |
| 11 | குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியடு நகையமர்ந் தன்றே. ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின் செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை; அங்குசங் கடாவ ஒருகை, இருகை . . . .110 திருமுருகாற்றுப்படை > 2. திருச்சீர் அலைவாய் > பாடல்: 11 | |
| 12 | ஐயிரு வட்டமொடு எ·குவலந் திரிப்ப, ஒருகை மார்பொடு விளங்க ஒருகை ஒருகை தாரொடு பொலிய, ஒருகை கீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப, ஒருகை பாடின் படுமணி இரட்ட, ஒருகை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட, ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற, அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல, . . . .120 திருமுருகாற்றுப்படை > 2. திருச்சீர் அலைவாய் > பன்னிரு கைகள்: > பாடல்: 12 | |
| 13 | உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ, விசும்பஆ றாக விரைசெலல் முன்னி, உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று, சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசுஅற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் . . .130 திருமுருகாற்றுப்படை > 2. திருச்சீர் அலைவாய் > பன்னிரு கைகள்: > பாடல்: 13 | |
| 14 | பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துனியில் காட்சி முனிவர் முற்புக, புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் . . . .140 திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > முனிவர்: > பாடல்: 14 | |
| 15 | நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர, நோயின்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க, கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . .150 திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > கந்தருவர்: > பாடல்: 15 | |
| 16 | கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . .150 புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு . உத்திரன்: . வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > திருமால்: > பாடல்: 16 | |
| 17 | உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவ ராக ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர பகலிற் றோன்றும் இகலில் காட்சி நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் . . .170 திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > . உத்திரன்: . > பாடல்: 17 | |
| 18 | தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று, இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180 திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > . .முப்பத்து மூவர்: > பாடல்: 18 | |
| 19 | மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல, ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று, பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் . . .190 திருமுருகாற்றுப்படை > 4. திரு ஏரகம் > அந்தணர்: > பாடல்: 19 | |
| 20 | அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியடு வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் . . . .200 திருமுருகாற்றுப்படை > 5. குன்றுதோறு ஆடல் > வேலன்: > பாடல்: 20 | |
| 21 | முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் . . . .210 திருமுருகாற்றுப்படை > 5. குன்றுதோறு ஆடல் > வேலன்: > பாடல்: 21 | |
| 22 | கொடியன் நெடியன் தொடியணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று, சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், . . . .220 திருமுருகாற்றுப்படை > 5. குன்றுதோறு ஆடல் > வேலன்: > பாடல்: 22 | |
| 23 | ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும், வேலன் தைஇய வெறியயர் களனும், காடும் காவும் கவின்பெறு துருத்தியும், யாறும் குளனும் வேறுபல் வைப்பும், சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் மாண்டலைக் கொடியடு மண்ணி அமைவர நெய்யடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் . . .230 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > முருகன் உறையும் இடங்கள்: > பாடல்: 23 | |
| 24 | செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியடு விரைஇய தூவெள் ளரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழிசை அருவியடு இன்னியம் கறங்க . . .240 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > . .முருகாற்றுப்படுத்தல்: > பாடல்: 24 | |
| 25 | உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக . . . .250 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > . .முருகாற்றுப்படுத்தல்: > பாடல்: 25 | |
| 26 | முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி, ‘நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ! ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே! வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ! இழையணி சிறப்பின் பழையோள் குழவி! வானோர் வணங்குவில் தானைத் தலைவ! . . .260 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > . .முருகாற்றுப்படுத்தல்: > பாடல்: 26 | |
| 27 | மாலை மார்ப! நூலறி புலவி! செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள! அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை! மங்கையர் கணவ! மைந்தர் ஏறே! வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே! அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக! நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள! . . . .270 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > . .முருகாற்றுப்படுத்தல்: > பாடல்: 27 | |
| 28 | அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்! மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்! பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்! சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! போர்மிகு பொருந! குரிசில்!’ எனப்பல யானறி அளவையின் ஏத்தி ஆனாது, ‘நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்!’எனக் . . . .280 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > . .முருகாற்றுப்படுத்தல்: > பாடல்: 28 | |
| 29 | குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன் வேறுபல் உருவின் குறும்பல் கூளியர் சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி, ‘அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன் பெரும!நின் வண்புகழ் நயந்¦’தன இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி, . . . .290 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > . .முருகாற்றுப்படுத்தல்: > பாடல்: 29 | |
| 30 | ‘அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர¦’வன அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ யாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்கும்;அதி பலவுடன் வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரற் பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல . . . .300 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > . .முருகாற்றுப்படுத்தல்: > பாடல்: 30 | |
| 31 | ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் . . . .310 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > அருவி : > பாடல்: 31 | |
| 32 | கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. . . . .317 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > அருவி : > பாடல்: 32 |