திருவருட்பயன் | Thiruvarutpayan | full |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கண்டபடியே கண்டு காணாமை காணாமல் கொண்டபடியே கொண்டு இரு. | கண்டபடி யேகண்டு காணாமை காணாமற் கொண்டபடி யேகொண் டிரு. |
| பொருள் : மாணாக்கனே, அறியாமையாகிய கேவலம் வந்து பொருந்தாதவாறு, கருவிகளை உனக்கு வேறாகக் கண்டு நீங்கித் திருவருள் ஞானத்தைப் பற்றி நின்றாய். பின்னும் அவ்வாறு அதனையே விடாது பற்றி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் அத்திருவருள் உன்னைத் தன்னிடத்து அடக்கிக் கொள்ளும். அது உன்னை விழுங்கிக் கொள்ளுமாறு அதற்கு இசைந்த நிலையினையே நீயும் மேற்கொண்டிரு. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தூ நிழல் அர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இது போல் தான் அதுவாய் நிற்கும் தரம். | தூனிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல் தானதுவாய் நிற்குந் தரம். |
| பொருள் : வெயிலில் அலைந்து வருந்தியவன் குளிர்ந்த நிழலை உடைய இடத்தைக் கண்டால் பிறர் சொல்லாதிருக்கவும் தானே அவ்விடத்தை அடைந்து நிழலில் அடங்கி நின்று இன்புறுவான். அதுபோல, அறியும் நெறியால் திருவருளை உணர்ந்த உயிர் தான் வேறாய் நில்லாமல் அத்திருவருளோடு ஒன்றுபட்டு அதனுள் அடங்கி அதுவேயாய் நிற்கும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தித்திக்கும் பால் தானும் கைக்குந் திருந்திடும் நாப் பித்தத்தில் தான் தவிர்ந்த பின். | தித்திக்கும் பாடானுங் கைக்குந் திருந்திடுநாப் பித்தத்தி டான்டவிர்ந்த பின். |
| பொருள் : பால் தித்திப்பாக இருப்பது அதன் இயற்கை. அந்த இயற்கைக்கு மாறாகப் பால் கசப்பது நாவில் சேர்ந்த பித்தம் என்னும் செயற்கையினால் ஆகும். பித்தமாகிய செயற்கை நீங்கியபோது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல, உயிருக்கு என்றும் உறவுப் பொருளாக இருப்பது திருவருள். அவ்வியல்புக்கு மாறாகத் திருவருள் பகைப் பொருளாக உயிர்க்குத் தோன்றுதல் அவ்வுயிரைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையினால் ஆகும். அச்செயற்கை நீங்கியபோது, திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| காண்பான் ஒளி இருளி்ல் காட்டிடவும் தான் கண்ட வீ்ண் பாவம் எந்நாள் விடும். | காண்பா னொளியிருளி்ற் காட்டிடவுந் தான்கண்ட வீ்ண்பாவ மெந்நாள் விடும். |
| ம் தான்கண்ட வீண் பாவம் என்னாய் விடும்? பொருள் : ஒருவன் இருளில் நிற்குங் காலத்தில் ஒளி தோன்றி எப்பொருளையும் அவன் காணுமாறு அவற்றை அவனுக்குக் காட்டுகிறது. ஆனால், அவன் அவ்வொளியினாலேயே தான் கண்டதாக எண்ணுவதில்லை. தானே கண்டு விட்டதாகக் கருதிக் கொள்கிறான். அதுபோலப் பெத்த நிலையிலும், முத்தி நிலையிலும் உயிர் யாதொன்றையும் அறியும் படியாகத் திருவருளே அறிவித்து வருகிறது. யாதொரு செயலையும் செய்யும்படியாகத் திருவருளே செய்வித்து வருகிறது. ஆனால், உயிர் திருவருளாலேயே தனக்கு அறிவும் செயலும் நிகழ்கின்றன என்பதை எண்ணுவதில்லை. தானே அறிந்தும் செய்தும் வருவதாகக் கருதுகிறது. இது பொய்யான கருத்தாகும். இப்பொய்க் கருத்து என்ன பயனைச் செய்யும்? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை தெளிவு தெளியார் செயல். | ஒளியு மிருளு மொருமைத்துப் பன்மை தெளிவு தெளியார் செயல். |
| பொருள் : ஒளியும், இருளும் ஒரு வகையில் ஒத்த தன்மை உடையனவாம். அஃதாவது, சூரியனுடைய பேரொளியை நோக்கும் போதும் கண் தெரியாது. இருளிலும் கண் தெரியாது. ஒளியில் அழுந்தியபோதும், இருளில் அழுந்தியபோதும் கண் பிற பொருள்களைக் காண மாட்டாததாகிறது. இஃது ஒப்புமை. இனி இரண்டிடத்திலும் கண் செயலற்று விடினும் இரண்டும் ஒன்றாவதில்லை. இரண்டிற்கும் என்ன வேறுபாடு எனில், ஒன்று ஒளியால் நிகழ்கின்ற தெளிந்த நிலை. மற்றொன்று இருளால் விளைகின்ற தெளியா நிலை. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கிடைக்கத் தகுமே நல் கேண்மையார்க்கு அல்லால் எடுத்துச் சுமப்பானை இன்று. | கிடைக்கத் தகுமேநற் கேணமையார்க் கல்லா லெடுத்துச் சுமப்பானை யின்று. |
| பொருள் : இறைவன், தம் செயலற்று நிற்கும் அன்பரை எவ்விடத்தும் தாங்கிக் காப்பான்; அவரைத் தன் மேல் வைத்துச் சுமந்து செல்லும் துணைவனாய் இருப்பான். இப்படிப்பட்ட துணை வனை ஏனையோர் பெறுதல் கூடுமோ? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவரத் துஞ்சினனோ போயினனோ சொல். | வஞ்ச முடனொருவன் வைத்த நிதிகவரத் துஞ்சினனோ போயினனோ சொல். |
| பொருள் : ஒருவன் வைத்துள்ள நிதியை மற்றொருவன் கள்ளமாய்க் கவர்ந்து கொள்வதற்கு, வைத்திருப்பவன் உறங்கி விட்டானோ? அல்லது அவ்விடத்தை விட்டுப் போய்விட்டானோ? சொல்வாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தனக்கு நிழல் இன்றாம் ஒளி கவரும் தம்பம் எனக் கவர நில்லாது இருள். | தனக்கு நிழலின்றா மொளிகவருந் தம்ப மெனக்கவர நில்லா திருள். |
| பொருள் : உச்சிவேளையில் பளிங்குத் தூண் பிற பொருள்களின் நிழல்கள் தன்னிடத்தில் படியாதபடி சூரியவொளி ஒன்றையே கவர்ந்து நிற்கும். அப்பளிங்குத் தூண்போல், உயிர் தன்னிடத்தில் பிற உணர்வுகள் சிறிதும் எழாதபடி திருவருள் ஒன்றையே முழுதுமாகப் பற்றி நிற்குமாயின் மலஇருள் அடியோடு நீங்குவதாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| உற்கை தரும் பொன் கை உடையவர் போல் உண்மைப் பின் நிற்க அருளார் நிலை. | உற்கைதரும் பொற்கை யுடையவர்போ லுண்மைப்பின் னிற்க வருளார் நிலை. |
| பொருள் : இருளில் நடப்போர் தீப்பந்தத்தை ஏந்தி வருகிறவன் முன்னே செல்லத் தாம் அவன் பின்னே செல்வர். அதுபோலப் பாசப் பற்றாகிய இருளை விலக்கி ஞானநெறியிற் செல்லும் உயிர்களுக்கு உதவியாக இறைவன் தனது திருவருள் ஒளியை வழங்கி வருகின்றான். உயிர் அவனுக்குப் பின் நிற்றலே திருவருளை முற்றப் பெறும் முறையாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஐம்புலனால் தாம் கண்டது என்றால் அது ஒழிய ஐம்புலனார் தாம் ஆர் அதற்கு. | ஐம்புலனாற் றாங்கண்ட தென்றா லதுவொழிய வைம்புலனார் தாமா ரதற்கு. |
| பொருள் : உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளைக் கொண்டு அறிந்து வந்ததெல்லாம் மெய்ப் பொருளாகிய சிவம் நீங்கலாக ஏனையவற்றையேயாம். அப்படியிருக்க, முத்திக் காலத்தில் அம்மெய்ப் பொருளை அறிவதற்கு அக்கருவிகள் துணையாதற்கு என்ன உரிமையுடையன? இனி, அக்கருவிகள் இன்றி ஒன்றையும் அறிய மாட்டாத உயிர்களும் தனியாய் நின்று அம்மெய்ப் பொருளை அறிதற்கு என்ன உரிமையுடையன? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தாமே தருபவரைத் தம் வலியினால் கருதல் ஆமே இவன் அர் அதற்கு. | தாமே தருபவரைத் தம்வலியி னாற்கருத லாமே யிவனா ரதற்கு. |
| பொருள் : முதல்வன் தானே தனது கருணையினால் உயிருக்கு ஞானத்தைத் தந்து தன்னை உணர்த்தி நிற்கிறான். அங்ஙனமாக, அம்முதல்வனை உயிர் தானே தன் முயற்சியினால் அடைந்ததாகக் கருதுவது பொருந்துமோ? முதல்வனை இவ்வுயிர் தனது வலிமையால் பெறுவதற்கு என்ன உரிமையுடையது. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின் பின் புகுவார் முன் புகுவார் பின். | இன்புறுவார் துன்பா ரிருளி னெழுஞ்சுடரின் பின்புகுவார் முன்புகுவார் பின். |
| பொருள் : பக்குவம் வருவதற்கு முன்னே, துன்பம் தரும் இருளில் வழி காட்டி வருகின்ற திருவருள் ஒளிக்கு முன்னால் சென்றவர், பக்குவம் வந்த காலத்தில் அதன் பின்னால் செல்வர்; அவ்வாறு பின் சென்று பேரின்பமாகிய பயனை அடைவர். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம் ஒருவன் ஒருத்தி உறின். | இருவர் மடந்தையருக் கென்பயனின் புண்டா மொருவ னொருத்தி யுறின். |
| பொருள் : பெண் பாலார் இருவர் சேர்வதிலே இன்பம் இல்லை. பெண் மகள் ஒருத்தியும் ஆடவன் ஒருவனும் கூடும் கூட்டத்திலேயே இன்பம் உண்டாகும். அதுபோல, உயிர் அருளோடு சேரும் நிலையில் இன்பமில்லை. உயிர் அருளுக்கு முதலாகிய, சிவத்தோடு கூடும் போதே பேரின்பம் விளையும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம் இன்ப கனம் ஆதலினால் இல். | இன்பதனை யெய்துவார்க் கீயு மவர்க்குருவ மின்பகன மாதலினா லில். |
| பொருள் : தன்னை அடைந்தார்க்கு இன்பத்தை வழங்குகின்ற இறைவன் இன்பமயமான வடிவினன். அப்படிப்பட்ட அவன் அவ்வின்பத்தைத் தான் நுகர்தல் என்பது இல்லை. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தாள் தலை போல் கூடி அவை தான் நிகழா வேறு இன்பக் கூடலை நீ ஏகம் எனக் கொள். | தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக் கூடலைநீ யேகமெனக் கொள். |
| பொருள் : தாள், தலை என்னும் இரு சொற்கள் புணர்ந்து, இரண்டாகக் காணப்படுதல் இன்றித் தாடலை என ஒரு சொல்லாய் நிற்கின்றன. இச் சொற்புணர்ச்சி போல உயிரும் சிவமும் ஆகிய இரண்டும் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்திநிலை என்று நீ கொள்வாயாக. மாணவனை முன்னிலைப்படுத்தி ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஒசை எழாது என்றால் ஒன்று அன்று இரண்டும் இல். | ஒன்றாலு மொன்றா திரண்டாலு மோசையெழா தென்றாலொன் றன்றிரண்டு மில். |
| பொருள் : உயிரும் கடவுளும் பொருளால் ஒன்றே எனில், முத்தியில் ஒன்றுதல் என்பது நிகழாது. ஒன்றுதலாவது இரு பொருள்களின் செயலாகும். பொருள் ஒன்றே உள்ளது என்றால், ஒன்றுதல் என்பது எப்படி நிகழ முடியும்? இனி, முத்தியில் உயிரும் கடவுளும் இரண்டாய் நிற்கும் என்றலும் பொருந்தாது. அவை இரண்டாய்ப் பிரிந்து நிற்பின் அங்கே ஒன்றுதல் என்னும் பேச்சு எழுவதற்கே வழியில்லை. இதனால், முத்தியில் உயிர் இறைப்பொருளோடு ஒன்றாய்ப் போய் விடாமலும், உயிரும் இறைவனும் தம்முள் இயையாத வேறுபட்ட இரண்டு பொருள்களாய் நில்லாமலு<ம், உயிர் இறைவனோடு கலப்பினால் ஒன்றாய் நின்று பேரின்பத்தை நுகரும் என்பது பெறப்படும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரை ஒழியப் பற்றாரும் அற்றார் பவம். | உற்றாரும் பெற்றாரு மோவா துரையொழியப் பற்றாரு மற்றார் பவம். |
| பொருள் : தாம் வேறு நில்லாது திருவருளிற் பொருந்தி அதனோடு ஒன்றாய் நின்றவரும், அதன்மேல் சிவப் பேற்றினை எய்தி நிட்டையில் நின்றவரும் மெய்ப் பொருளை ஒருபோதும் நீங்க மாட்டார். அவர்க்கு இனிப் பிறவி இல்லை. இந்த உற்றாரும், பெற்றாரும் போல மெய்ப் பொருள் ஒன்றையே பற்றமாட்டாமல் கேட்டல், சிந்தித்தல் என்ற படிநிலைகளில் நிற்ப வரும் மேற்படிகளை எய்திப் பிறவி அறும் நிலையைப் பெறுவார்கள். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி நீ ஒன்றும் செய்யாது நில். | பேயொன்றுந் தன்மை பிறக்கு மளவுமினி நீயொன்றுஞ் செய்யாது நில். |
| பொருள் : மாணவனே, பேய் வசப்பட்டாரது தன்மை போல அருள் வயப்பட்டு நிற்கும் தன்மை உனக்கு உண்டாகும் வரையும், நீ தன் முனைப்போடு யாதொரு செயலு<ம் செய்யாமல் நிற்பாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒள் பொருள் கண் உற்றார்க்கு உறு பயனே அல்லாது கண் படுப்போர் கைப் பொருள் போல் காண். | ஒண்பொருட்க ணுற்றார்க் குறுபயனே யல்லாது கண்படுப்போர் கைப்பொருள்போற் காண். |
| பொருள் : மெய்ப் பொருளாகிய சிவத்தில் அழுந்தினவர்களுக்கு அதனால் வரும் பேரின்பம் ஒன்று தவிர ஏனையவெல்லாம், உறங்கிப் போனவனது கையிலுள்ள பொருள் தானே நழுவுவது போலத் தாமே நீங்கிவிடும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| மூன்றாய தன்மை அவர் தம்மின் மிக முயங்கித் தோன்றாத இன்பம் அது என் சொல். | மூன்றாய தன்மையவர் தம்மின் மிகமுயங்கித் தோன்றாத வின்பமதென் சொல். |
| பொருள் : சிவனும் உயிரும் ஆகிய அவ்விருவரும் தம்முள் மிகவும் கலந்து ஒன்றாய் நின்ற அந்நிலையில் உயிர் பேரின்பத்தை நுகரும். அவ்வின்ப அனுபவத்தில் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் இருந்தாலும் அம்மூன்றும் வெவ்வேறாகத் தோன்றுவது இல்லை. மூன்று பொருள் என்ற வேறுபாடு தோன்றாத ஒருமை நிலை அது. உயிர் தன்னை மறந்து, தனது அறிவை மறந்து சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தியிருக்கும். அவ்வின்ப அனுபவம் இன்னவாறு இருந்தது என்று எவ்வாறு சொல்ல இயலும்? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம் அன்பு நிலையே அது. | இன்பி லினிதென்ற லின்றுண்டே லின்றுண்டா மன்பு நிலையே வது. |
| பொருள் : இன்பங்கள் எல்லாவற்றிலும் இனிமையுடையது எனச் சிறப்பிக்கப்படும் முத்தியின்பத்தை இப்பிறப்பிலேயே பெறலாம். அதற்கு முன்னே ஆன்மா ஒன்றைப் பெறவேண்டும். அந்த ஒன்று எது எனில், இறைவனிடத்தில் இடையறாது அன்பு செய்து நிற்கும் நிலையேயாகும். இந்த அன்பு நிலை இன்று உண்டானால், பேரின்பமும் இப்பொழுதே உண்டாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அருள் நூலும் ஆரணமும் அல்லாது ஐந்தின் பொருள் நூல் தெரியப் புகின். | அருணூலு மாரணமு மல்லாது மைந்தின் பொருணூ டெரியப் புகின். |
| பொருள் : அருள் நூலாகிய ஆகமங்களும், அற நூலாகிய வேதங்களும், இவையல்லாத பிற நூல்களும் ஆகிய யாவும் திருவைந்தெழுத்தின் பொருளை விளக்கும் நூல்களேயாம். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இறை சத்தி பாசம் எழில் மாயை ஆவி உற நிற்கும் ஓங்காரத்து உள். | இறைசத்தி பாச மெழில் மாயை யாவி யுறநிற்கு மோங்காரத் துள். |
| பொருள் : ஓங்காரத்தின் பரிணாமம் ஆகிய ஐந்தெழுத்தில் இறையும், அதன் சத்தியும், தளையாகிய ஆணவமும், எழில் மிக்க மாயையும், ஆன்மாவும் என்பவை பொருளாகப் பொருந்தி நிற்கும். | |
| பாடல் எண் | பாடல் | Verse | ||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| 83 | இரு வகை நடனம்
திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 83 | |||||||
| 0 | ||||||||
| 84 | ||||||||
இருவகை நடனத்தாலும் விளைவன
திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 84 | 1 | நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக் கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா நின்றவா றெவ்வாறு நீ. வினா வெண்பா > நூல் > பாடல்: 1 | ||||||
| 2 | இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி மருளி நிலையருளு மானும் - கருவியிவை நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா வீங்குனரு ளாலென் பெற. வினா வெண்பா > நூல் > பாடல்: 2 | |||||||
| 85 | ||||||||
| 3 | புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள் ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா ஞானமலை யாவாய் நவில். வினா வெண்பா > நூல் > பாடல்: 3 | |||||||
| 4 | கனவு கனவென்று காண்பரிதாங் காணி னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள் தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா யானவத்தை காணுமா றென். வினா வெண்பா > நூல் > பாடல்: 4 | |||||||
| 86 | ||||||||
| 5 | அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின் குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள் தாமா வறியா தடமருதைச் சம்பந்தா யாமா ரறிவா ரினி. வினா வெண்பா > நூல் > பாடல்: 5 | அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின் குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள் தாமா வறியா தடமருதைச் சம்பந்தா யாமா ரறிவா ரினி. வினா வெண்பா > நூல் > பாடல்: 5 | ||||||
| 6 | சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின் மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா வென்கொண்டு காண்பேனி யான். வினா வெண்பா > நூல் > பாடல்: 6 | |||||||
| 87 | ||||||||
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும் பவம் இது நீ ஒதும் படி. | சிவமுதலே யாமாறு சேருமே றீரும் பவமிதுநீ யோதும் படி. |
| பொருள் : திருவைந்தெழுத்தில் சிகாரம் வகாரம் என்னும் இரண்டும் முதலில் வருமாறு உச்சரித்தல் கூடுமாயின் பிறவி நீங்கும். பிறவிக்கு அஞ்சுகின்ற நீ ஓத வேண்டிய முறைமை இதுவாகும். | |