திருமந்திரம் | Thirumanthiram

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே. 20

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 16. பதி பசு பாசம் வேறின்மை > பாடல்: 2424

The Tapasvins (four) sought of yore
The Way (of Truth) from the Lord;
He, the Gracious One,
Gave them answer by Divine Gesture (Chin mudra);
And as with their hands they held fast to His feet,
They reached the Way of Truth, their Self-realizing.

வேதாகமங்களின் அர்த்தத்திலே தெளிவு பிறவாமல் ஐயுற்று வினாவிய முனிவர்களை, அந்த வேதாமகப் பொருள்களில் முடிந்த பொருளாய் உள் அருட்டிரு மேனியானது தனது கையினாலே அணைத்துத் தழுவிக் கொள்ளுதலும், அவர்கள் அத்திருமேனியில் அமைந்த கைக்குறிப்பினாலே தம்மை உள்ளவாறு உணர்ந்துகொண்டார்கள்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jun 29, 2026