திருவருட்பயன் | Thiruvarutpayan

மாயை யாகிய விளக்கு

பதம் பிரித்துஉள்ளபடியே
விடிவு ஆம் அளவும் விளக்கு அனைய மாயை
வடிவு ஆதி கன்மத்து வந்து.
விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து.
பொருள் : மாயையினின்றும் உடம்பு முதலியவை தோன்றி உயிர்களைப் பொருந்துகின்றன. அவ்வாறு அவை வந்து பொருந்துவது அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஏற்பவேயாகும். ஆணவமாகிய இருள் நீங்கி விடிவு வரும் வரையிலும் மாயையின் காரியமாகிய இந்த உடம்பு முதலியவை உயிருக்கு விளக்குப் போல நின்று உதவுகின்றன.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 30

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026