திருவருட்பயன் | Thiruvarutpayan

பிறவி நீங்க

பதம் பிரித்துஉள்ளபடியே
சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம் இது நீ ஒதும் படி.
சிவமுதலே யாமாறு சேருமே றீரும்
பவமிதுநீ யோதும் படி.
பொருள் : திருவைந்தெழுத்தில் சிகாரம் வகாரம் என்னும் இரண்டும் முதலில் வருமாறு உச்சரித்தல் கூடுமாயின் பிறவி நீங்கும். பிறவிக்கு அஞ்சுகின்ற நீ ஓத வேண்டிய முறைமை இதுவாகும்.

திருவருட்பயன் > ஒன்பதாம் அதிகாரம் > 9. அஞ்செழுத்தருள் நிலை > பாடல்: 87

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026