திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| மும்மை தரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு அம்மையும் இம்மையே யாம். | மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதறிவார்க் கம்மையு மிம்மையே யாம். |
| பொருள் : வினைகள் இம்மை, அம்மை, மறுமை என்னும் மூவகைப் பயனையும் தருவன. அவ்வினைகள் உயர்ந்த ஞானம் உடையவரிடத்தில் மூண்டு வளர்தல் இல்லை. அதனால் அவர்க்கு இவ்வுடம்பு நீங்கிய பின் எய்தும் பேரின்ப நுகர்ச்சியாகிய பரமுத்தி நிலை இவ்வுடம்பு உள்ள இப்பொழுதே உண்டாவதாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows