திருவருட்பயன் | Thiruvarutpayan

அந்நிலையை இந்நிலையில் அடைதல்

பதம் பிரித்துஉள்ளபடியே
மும்மை தரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு
அம்மையும் இம்மையே யாம்.
மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதறிவார்க்
கம்மையு மிம்மையே யாம்.
பொருள் : வினைகள் இம்மை, அம்மை, மறுமை என்னும் மூவகைப் பயனையும் தருவன. அவ்வினைகள் உயர்ந்த ஞானம் உடையவரிடத்தில் மூண்டு வளர்தல் இல்லை. அதனால் அவர்க்கு இவ்வுடம்பு நீங்கிய பின் எய்தும் பேரின்ப நுகர்ச்சியாகிய பரமுத்தி நிலை இவ்வுடம்பு உள்ள இப்பொழுதே உண்டாவதாகும்.

திருவருட்பயன் > பத்தாம் அதிகாரம் > 10. அணைந்தோர் தன்மை > பாடல்: 99

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026