திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai

பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு 
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு 
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை 
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புக,
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் . . . .140 

திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > முனிவர்: > பாடல்: 14

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, Apr 18, 2026