16. செவ்வானும் சுடுநெருப்பும்! பாடியவர்: பாண்டரங் கண்ணனார். பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. திணை: வஞ்சி. துறை; மழபுல வஞ்சி. வினை மாட்சிய விரை புரவியடு, மழை யுருவின தோல் பரப்பி, முனை முருங்கத் தலைச்சென்று, அவர் விளை வயல் கவர்பு ஊட்டி மனை மரம் விறகு ஆகக் கடி துறைநீர்க் களிறு படீஇ எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப், புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத், துணை வேண்டாச் செரு வென்றிப், புலவு வாள் புலர் சாந்தின் முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்! மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், பனிப் பகன்றைக், சுனிப் பாகல், கரும்பு அல்லது காடு அறியாப் பெருந் தண்பணை பாழ் ஆக, ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை, நாம நல்லமர் செய்ய, ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.
புறநானூறு > பாடல்: 16
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக