30. எங்ஙனம் பாடுவர்? பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி. திணை :பாடாண். துறை : இயன்மொழி. சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல். செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும், வளி திரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றிவை சென்றளந்து அறிந்தார் போல, என்றும் இனைத்து என்போரும் உளரே அனைத்தும் அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக், களிறுகவுள் அடுத்த எறிகல் போல ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது, புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!
புறநானூறு > பாடல்: 30
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக