34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை! பாடியவர்: ஆலத்தூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை:பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு: 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி. ‘ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும், மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும், குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும், வழுவாய் மருங்கின் கழுவாயும் உள’ என, ‘நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என’ அறம் பாடின்றே ஆயிழை கணவ! ‘காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கருவன்ன புன்புல வரகின் பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக், குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு, இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக், கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி, அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், எங்கோன்,வளவன் வாழ்க!’என்று, நின் பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின், படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்; யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின், இமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக், கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய, பலவே!
புறநானூறு > பாடல்: 34
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக