67. அன்னச் சேவலே! பாடியவர்: பிசிராந்தையார். பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன், திணை: பாடாண். துறை: இயன்மொழி. அன்னச் சேவல் ! அன்னச் சேவல் ! ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல் நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக், கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் மையல் மாலை யாம் கையறுபு இனையக், குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி, வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது சோழ நன்னாட்டுப் படினே, கோழி உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ, வாயில் விடாது கோயில் புக்கு, எம் பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர் ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத், தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே-
புறநானூறு > பாடல்: 67
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக