76. அதுதான் புதுமை! பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை :வாகை. துறை: அரச வாகை. ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி, ஒலியல் மாலையடு, பொலியச் சூடிப், பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக, நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப், பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க, ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!
புறநானூறு > பாடல்: 76
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக