திருமந்திரம் | Thirumanthiram

மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப்படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே. 13

திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 18. அருசமயப் பிணக்கம் > பாடல்: 1542

All the holy ones hail Him as Great God, the Supreme Lord,
He that is Nada and bears the name Nandi;
You too shall make no distinction,
But in prayer lift your hands to Him as Being Supreme;
And the Primal One shall as such reveal Himself.

பெரிய தவத்தையுடையோர் யாவரும், `மகா தேவன்` என்பதைத் தன் பெயராக உடைய சிவனே முதல்வன் என ஒருபடித்தாகக் கூறுவர். அதனால், அவர் கூறிய வாறே அறியப்படுபவ னாகிய சிவனைச் சிறிதும் வேறுபடாத அக்கருத்துடன், `முதல்வனே` என்று அழைத்துக் கும்பிட்டால், அந்தச் சிவனும் நன்னெறியாய் நின்று நலம் தருவான்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Apr 23, 2026