நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக் கருமங்க ளாலே கழிதலில் கண்டு குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால் பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே. 19
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 38. இதோபதேசம் > பாடல்: 2120
The humans and Celestials Inveighed by Pasas In Karma perish; Seeing this, Why not hold to Guru That is Jnani, And blemishless Pure As Param Supreme itself? No more then to speak of.
மக்களே யாகுக; அவரினும் மேற்பட்ட தேவரே யாகுக; எல்லோரும் பாசத்துட்பட்ட பசுக்களேயாய் வினைவழிவந்து நீங்கிப் போதலின், `குரு` எனப்படுபவன் அந்நிலையை உணர்ந்து பாசத்தின் நீங்கி நிற்றலால், `ஞானி` என வேறுவைத்து எண்ணப் படுதலால், அவனை, `பதி` எனவே கூறுதல் வேண்டுமன்றி, வேறு சொல்லுதற்கில்லை.