திருமந்திரம் | Thirumanthiram

கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. 15

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை > பாடல்: 2156

Having reached Deep Sleep State of Sushupti,
He with three there remains;
--Chitta (Will), Prana (Vital Breath) and Sentience of Self,
Thus into the Herat-Center Jiva enters
There one with the Subtle Object he stands
(In the state of Sushupti Deep.)

சுழுத்தியில் உள்ள மூன்று கருவிகளுள் புருடனுக்கு அறிவைத் தருவதாகிய சித்தம் நீங்கிப்போக, உந்திக் கமலத்தின்கண் பிராணவாயு ஒன்று மட்டுமே அவனுக்கு அறிவைத் தருவதாய் அமைய அங்கு இருந்துகொண்டு, ஆன்ம தத்துவங்கள் யாவும் தன்கண்வந்து ஒடுங்கநிற்பதாகிய மூலப்பிரகிருதியைத் தான் சிறிது அறிதலை அவன் செய்துகொண்டிருப்பான்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Apr 24, 2026