திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 30. புறங்கூறாமை > பாடல்: 2524
Of Wisdom infinite, The Tapasvins great in wisdom stood, Pure as moon's rays they beam; In Transcendental bliss they are; Themselves Divine Jnana becoming, They encompassed in Consciousness The Universe Cosmic; And entering Upasanta They freed themselves of Malas, And State of Quiescence reached.
`மதி` என்பதற்கு, `அறிவு` என்பதும் பொருள் ஆதலால் `மதி` என்னும் பெயருக்கு வானத்துச் சந்திரனை விட மிக உரிமையுடைய உச்சிச் சந்திரனை அடைந்து, அதனால் உண்டாகும் அறிவையே அறிவாகப் பெற்ற யோகிகளுடைய தூய அறிவாய் விளங்கும் ஒளி, பேரின்பமே வடிவாக உடைய பரம்பொருளாம். அதனால், பிறரெல்லாம் தங்களுடைய நிலையற்ற அறிவையே அறிவாகப் பற்றி உலகத்தை நுகர்ந்துகொண்டிருக்க இவ்யோகிகள் `உபசாந்தம்` என்னும் நிலையை அடைந்து, அநாதியே பற்றிய மலங்கள் நீங்கப்பெற்று, அமைதி நிலையை அடைகின்றனர்.