விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலும் சோதிப் பிரானும் பதிவழி காட்டும் பகலவ னாமே. 45
திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 45
Except by Fate He decrees this sea-girt world revolves not, Except by Fate He decrees do joys and age arrive not, Daily pray to the Light Effulgent; The Divine Path He'll prove, the Sure Sun He'll be.
கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.