திருமந்திரம் | Thirumanthiram

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 16 பாத்திரம். > பாடல்: 503

I gave Him not up even while in womb;
I forgot not the truth of His holy Feet;
I gave up falsehood and sought them;
The Feet of Lord of matted locks
Are a Lamp no oil feeds.

நான் சிவபெருமானது திருவடியைக் கருவில் இருந்தபொழுதும் மறந்திலேன், பிறந்து வாழ்கின்ற இப்பொழுதும் அதனை மெய்யன்போடே நான் தேடுகின்றேன். அதனால், அத் திருவடி எனக்கு நெய்விட்டு ஏற்றாது இயல்பாகவே ஒளிவிடும் விளக்காகும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Jun 29, 2026