திருவருட்பயன் | Thiruvarutpayan

பொருள்கள் தம்மில் இயைந்து நிற்றல்

பதம் பிரித்துஉள்ளபடியே
செய்வானும் செய் வினையும் சேர் பயனும் சேர்ப்பவனும்
உய்வானும் உளன் என்று உணர்.
செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் சேர்ப்பவனு
முய்வானு முளனென் றுணர்.
பொருள் : மாணவனே, வினையைச் செய்பவனாகிய நீயும், உன்னால் செய்யப்படுவனவாகிய இருவினைகளும், அவற்றின் பயன்களாகிய இன்பத் துன்பங்களும், அப்பயன்களை உன்னோடு கூட்டுவிப்பவனாகிய இறைவனும் என இம்முறையில் நீ பாசத்தோடும் பதியோடும் தொடர்பு கொண்டுள்ளாய். இவ்வாறு யான் உள்ளேன் என்று உன்னியல்பை உணர்வாயாக.

திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 53

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 19, 2026