திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| செய்வானும் செய் வினையும் சேர் பயனும் சேர்ப்பவனும் உய்வானும் உளன் என்று உணர். | செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் சேர்ப்பவனு முய்வானு முளனென் றுணர். |
| பொருள் : மாணவனே, வினையைச் செய்பவனாகிய நீயும், உன்னால் செய்யப்படுவனவாகிய இருவினைகளும், அவற்றின் பயன்களாகிய இன்பத் துன்பங்களும், அப்பயன்களை உன்னோடு கூட்டுவிப்பவனாகிய இறைவனும் என இம்முறையில் நீ பாசத்தோடும் பதியோடும் தொடர்பு கொண்டுள்ளாய். இவ்வாறு யான் உள்ளேன் என்று உன்னியல்பை உணர்வாயாக. | |