இருபாஃ இருபது | Irubaa Irubathu

மதிநுதல் பாகன் ஆகிக் கதிதர 
வெண்ணெய்த் தோன்றி நணி உள் புகுந்து என் 
உளம்வெளி செய்து உன் அளவில் காட்சி 
காட்டி என் காட்டினை எனினும் நாட்டிஎன் 
உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல் 
பாதாள சத்தி பரியந்தம் ஆக 
ஓதி உணர்ந்த யானே ஏக 
முழுதும் நின்றனனே, முதல்வ! முழுதும் 
புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி 
ஆங்கு ஐந்து அவத்தையும் அடைந்தனன் நீங்கிப் 
போக்கு வரவு புரிந்தனன் தூக்கி 
எவ்விடத்து உண்மையும் இவ்விடத்து ஆதலும் 
செல் இடத்து எய்தலும் தெரித்த மூன்றினும் 
ஒன்று எனக்கு அருளல் வேண்டும் என்றும் 
இல்லது இலதாய் உள்ளது உளது எனும் 
சொல்லே சொல்லாய்ச் சொல்லும் காலைச் 
சிறுத்தலும் பெருத்தலும் இலவே நிறுத்தி 
யானை எறும்பின் ஆனது போல் எனில் 
ஞானம் அன்று அவை காய வாழ்க்கை 
மற்றவை அடைந்தன உளவெனின் அற்றன்று 
விட்ட குறையின் அறிந்து தொன்று 
தொட்டு வந்தனன் என வேண்டும் நட்ட 
பெரியதில் பெருமையும் சிறியதில் சிறுமையும் 
உரியது நினக்கே உண்மை, பெரியோய்! 
எனக்கு இன்று ஆகும் என்றும் 
மனக்கு இனியாய்! இனி மற்றது மொழியே 

இருபாஃ இருபது > பாடல்: 6

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 19, 2026